அவள் ஒரு பைத்தியம்.

காதல்
5 out of 5 (1 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

அவன் ஒரு பைத்தியம்.

»»»»»»»»»»»»»»»»»»»»»

ஏன் பா டுபாகூர்....

உனக்கு காதலைப் பற்றி என்ன தெரியும்?

புண்ணாக்கு கொசுவத்தி.

மூஞ்சி தெரியாது, முகர கட்டை தெரியாது,

ஆளும் தெரியாது,

எந்த ஊர்? எந்த ஜாதி அவள் குலம் என்ன? கோத்திரம் என்ன? அவள் கருப்பா!இல்லை செவப்பா?

ஒண்ணுமே தெரியாது? பின்னே எதைப் பார்த்து காதல்.......

என்னடா......காதல் கத்தரிக்காய்,....

வெங்காயம்..

சோத்து மூட்டை பன்னி பரதேசி?

அட போங்கய்யா...

என்ன உலகமோ... இது என்ன வாழ்க்கையோ..!

மனம் மிகவும் வேதனையில் மாண்டு போக

மெல்ல நடந்துக் கொண்டு இருந்தாள் அவள் சோபனா.

ச்சி.. ச்சி... இப்படியும் உலகத்துல இருக்காங்களே பொம்பிள பைத்தியங்கள் அவர்களை என்ன சொல்ல?

அவள் யாரு?

வேறு யாரு. நம்ப சோபனா தான்.

மெல்ல மெல்ல வீசிய தென்றல் கூட சுட்டது அவளை.

அவள் மேனியில் ஹாக்கின்ஸ் குக்கர் சூடு போலசூடு இருந்தாலும். விசில் அடித்தது.

இன்பம்,

துன்பம்,

கவலை,

கற்பனை இவையெல்லாம் ஒன்றாகவே சேர்த்து க் கொண்டு அவளை தாக்கியது.

இந்த ஆம்பிளைங்க ஜாதி தான் இப்படி இருக்குமோ!

அட...ச்சை...

கனவுகளில் கூட இந்த சேட்டைகள் வந்து தொலைக்கிறதே!

நிம்மதி இல்லாத பொழுதுகள் எல்லாம்

கரைகிறது.

வாசமிக்க ரோஜா செடியில் பூக்கும் பூ கூட வாடி போகும்.

அவளின் மூச்சு காற்றின் சூட்டில்.

கொதித்துக்கொண்டு இருந்தாள்..

ஒருவன் வைச்ச பெயர் ராதா..

இன்னோருவன் வச்ச பெயர்..

வேண்டாம்...

ஹலோ யாருங்க பேசறது?

நான் தான் சுமிதா பேசுறேன்..

வணக்கம் சொல்லுங்க?

உங்களுக்கு எப். எம்மில் உங்க கதை போட உங்களுக்கு விருப்பமா?

என்ன என்ன சொல்றிங்க..?

இல்லை நீங்கள் நல்லா கதைகள், கவிதைகள், எழுதுறீங்க. உங்க ரசிகை நான்.

நான் எப் எம்மில் இருக்கிறேன். நிறைய பேர் இதில் கதை, கவிதை, எழுத்துறாங்க?

நீங்களும் முயற்சி செய்யலாமே!

ஆமாம்...

எனக்கு இன்னோருவரும் இதேப் போல சொன்னாங்க?

அவங்க வாட்சப் நம்பர் கூட அனுப்பி இருக்காங்க?

ஆனால் எனக்கு எப்படி எழுதுவது என்றே தெரியாதே!

அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எழுதுகிறேன் என்று மட்டும் சொல்லுங்க?

ம்ம்ம்

கவலை பட வேண்டாம்.

உங்களுக்கு நான் உதவி தான் செய்ய நினைக்கிறேன்.

இதோ பாருங்கள்...

ரொம்ப ஆசை தான் இன்னும் நிறைய எழுத ஆனால் சில சிக்கல்கள் வருதே அதான் பார்க்குறேன்.

இங்கே நாலு பேர் எனக்கு காதல் பண்ணுறாங்கலாம்.

கவிதை வேறு எழுதி தொலைக்கிறாங்க.

ஒருத்தன் கதையே எழுத்துறான்.

ச்சி... இந்த தளத்தை விட்டே ஓடி போய் விடலாம் என்று தோணுது.

ஐயோ அதெல்லாம் விடுங்கள்...

அழகா ஒரு பொண்ணு இருந்தா...

அதோடு அழகும் சேர்ந்து இருந்தா..

அதோடு பணமும் சொத்தும் இருந்தா..

அப்படி தான் எல்லோரும் ஆசை படுவாங்க. இது இயற்கை.

ஆமாம்.

சரிங்க...

இல்லை நம்மால் அவங்களுக்கு எதற்கு கஷ்டம்?

ஒய்

கவலை விடுங்கள்.

நான் அவங்களால இன்பாக்ஸ் வருவதே இல்லை.

இப்போ ரெண்டு நாளா கவிதைகள் கூட எழுத வில்லை.

அட போங்கப்பா..

யாரோ.. ஏரிக்கு பயந்து கழுவமா போனானாம்.

ச்சி... போங்க..

இல்லை இல்லை.

முட்டைப் பூச்சிக்கு பயந்து வீடு கொளுத்திய

கதை மாதிரி இருக்கு உங்க கதை.

சோபனா.

உங்க பெயரா?

ஆமாம்.

எந்த ஊர் உங்களது?

ஓசூர். பாரதி நகர்.

சரி என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைத்தது?

அதுவா உங்க ரசிகை நான் என்பது உங்களுக்கு தெரியாது.

உங்க கவிதைகள் எல்லாம் நான் நூலகத்தில் வைத்து இருக்கிறேன்.

உங்க ஐ டி யில் ஒரு தடவை குறிச்சி இருக்கீங்க?

இல்லையே... நான் எந்த விவரங்களையும் குறிக்க வில்லை.

உங்க ஆட்டோகிராப் சிறு கதை படிச்சி இருக்கிறேன்.

அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது.

ம்ம்ம்

அப்புறம்.

சிவகாமி தொடர் அறுபது அத்தியாயம் எழுதி முடித்து விட்டேன்.

ஆமாம் நான் படிச்சி இருக்கிறேன்.

நல்லா இருக்கு.

இதோ பாருங்கள். ரொம்ப அழகா எழுதும் நீங்கள் என் எப். எம் க்கு எழுத கூடாது.

உங்க டெலன்டுக்கு நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது எல்லோருக்கும் தெரியட்டும்.

சரி இதுவரை நீங்கள் எழுதிய எல்லா கவிதைகளும் படித்து விட்டேன்.

ரொம்ப மகிழ்ச்சி நன்றி.....

உங்களைப் பற்றி....

நான் ஆங்கில இலக்கியம் படித்து உள்ளேன்.

ஆனால் தமிழ் இலக்கியம் ரொம்ப ரொம்ப

பிடிக்கும்.

சரி மீண்டும் உங்களை நாளைக்கு பார்க்கிறேன்.

என் வாட்சப் நம்பர் இது இதில் நீங்கள் எப்போ வேண்டும் என்றாலும் பேசலாம்.

சரிங்க...

பை....

ஹலோ... மேடம்....

என்னை மன்னித்து விடுங்கள்.

நான்

ரொம்ப ரொம்ப தப்பு பன்னி விட்டேன்.

என் கூட பேச மாட்டிங்களா?

ப்ளீஸ்

ப்ளீஸ் மேடம் பேசுங்கள்.

ஏய்

ஒழுங்கா மரியாதையா..கவிதையில் என் பெயர் எதுக்கு போட்டே!

கதை அதும் காதல் கதை வேறு எழுதி இருக்கே.

உடனே டெலீட் பண்ணு

உன்னை யார் என் பெயர் போட சொன்னாங்க?

யாரை கேட்டு என் பெயர் போட்ட

உனக்கு யார் அனுமதி கொடுத்தது?

மரியாதையாக நீ டெலிட் செய்ய வில்லை என்றால்

நான் உன் மேலே கம்பளைண்ட் பண்ணுவேன்

வேண்டாம் மேடம் இப்போவே டெலீட் செய்து விடுகிறேன்.

கம்ப்ளின்ட் பண்ணாதீங்க என்னை மன்னிசிருங்க மேடம்.

ஓகே

ஓகே டெலீட் செய்.

இது வரை உன்னை பிளாக் செய்ய வில்லை.

நீ திருந்தி விடுவாய் என்று தான் இருந்தேன். ஆனால் நீ இன்னும் திருந்த வில்லை.

அவன் நம்பரை சோபனா பிளாக் செய்து விட்டேன்.

ஹலோ... சோபு.

என்ன சுமிதா..?

என்ன நான் சொன்னேனே... நானும் எப்

எம்மில் தான் இருக்கிறேன்.

அதான் உங்களுக்கு சொன்னேன்

அதில் உங்க நல்ல கதைகளுக்கு பணம் கிடைக்கும்.

நிறைய எழுத்தாளர்கள் எழுதி பணம் சம்பாதிக்கிறாங்க?

எனக்கு காசு பணம் சம்பாதிக்கணும்ன்னு ஆசை இல்லை.

இல்லை வேண்டாம் விடுங்கள்.

ஒரு தமிழ் இலக்கியத்திற்கு உங்களைப் போன்ற சிறந்த எழுத்தாளர் தேவை.

ஐயோ

நான் அப்படி ஒன்றும் சிறந்த எழுத்தாளர் இல்லை.

ஓகே

நாளைக்கு எப். எம்மில் சேரிங்க சரியா...

ம்ம்ம்

பார்க்கலாம்.

யூ டூப் பில் கூட நீங்கள் ஆடியோ, வீடியோ அனுப்பலாமே. அதில் ஒரு சேனல் கிரியேட் பண்ணலாம்.

அதில் ஒரு நண்பர் இருக்கிறார் அவர் கூட ஹெல்ப் செய்வார்.

மேடம் அது வேண்டாம்..

எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது.

எனக்கு நண்பர்கள் உதவியும் வேண்டாம்.

ம்ம்ம்ம்

சரி

உங்க காதல்..

இல்லை இல்லை உங்களுக்கு காதல் தொல்லை கொடுக்கும் நண்பர்கள் என்ன ஆனார்கள்?

தெரியாது... ஆனால்.. இப்போ இங்கே கதை, கவிதை எழுதும் ஆர்வமே அவர்களால் குறைந்து விட்டது.

ஓகே

எழுதுங்கள்.. உங்க எழுத்துக்கள் அருமை.

உண்மையில் நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர்.

போதுமே புகழ்ந்தது.

என்ன நான் சொன்னது..

இங்கே எனக்கு சொந்தங்கள் இருக்கு அம்மா,

செங்கை 'மனோ '

வட அமெரிக்கா சிவகாமி கார்த்திகேயன்.

இன்னும்

நிறைய..

நிறைய... அம்மா, சகோதரிகள், சம்பாதித்து இருக்கிறேன்.

இந்த மூன்று வருடங்களாக. அதான் யோசிக்கிறேன்.

இல்லை என்றால் எப்போதோ இந்த தளத்தை விட்டு போய் இருப்பேன்.

மதுரையில் இருந்து ஒரு அக்கா ரொம்ப என் மேல் பாசமா இருக்காங்க

அப்போ நான்....

நீங்களும்.....

நான் உங்க ஆட்டோகிராப் கதைக்கு கமெண்ட்ஸ் போட்டு இருப்பேன் பாருங்கள்.

ம்ம்ம்ம் சரி பார்க்கிறேன்.

ஒரு

நல்ல முடிவ சொல்லுங்க

உங்களுக்காக ஐ ஆம்.. வைட்டிங்..

ரொம்ப தலை வலியால் சோபனா கட்டிலில் போய் விழுந்தாம்

மெசேஜ்..

ஆமாம்.. ஹலோ... மேடம்... ஹலோ... மேடம்...

இது ஒன்னு...

அடுத்தப் படி.

. என் ராதை நீ காற்று நான் மரம் நீ என்ன சொன்னாலும் நான் தலையாட்டுவேன்.

ஐயோ...

சாமி... சாமி.... என்னை காப்பாருப்பா..

அந்த ஏழு மலையானே!

என்னை காப்பாற்று..

சோபனாவின் மனம் இவர்களுக்காக ஈரம் கசிய ஆரம்பித்தது.

புயலில் விழுந்த மரம் போல் ஆகிவிட்டது.நெஞ்சகுழியில் ஈரம் வற்றிப் போய் விட்டது.

வாழ்க்கை முற்றிலும் கசந்து தான் போனது

வாய் வார்த்தைகளுக்கு வர்ணம் பூசிய மௌனம் கலைந்து போக ஒவ்வொரு நிமிடமும் கனவுகளின் அங்கீகாரத்தால் பயணம் தொடர்ந்தது..

காலங்கள் வாழ்த்துக்கள் கூற நெஞ்சில் கவிதை கள் பிறந்தது.

சார் என்ன மௌனம்..

உங்களை தான் நான் உங்களிடம் பேசுவது உங்களுக்கு எடைஞ்சளாக இருக்கா சார்.

.இல்லை இல்லை அப்படி இல்லை

சரி உங்களிடம் கடைசியாக ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டு விட்டு போகிறேன்.

சரி கேளுங்க.

உங்க கதையில் வரும் ஜெயஸ்ரீ உண்மையில் இருக்கிறாளா சார்.

அந்த கேள்விக்கு நான் இன்னும் விடையை தேடிகிட்டு தான் இருக்கிறேன்..

ஒரு நாள் ராஜாவுக்கு மெசேஜ் வந்தது.. எப்படி இருக்கீங்க? என்று. அதிர்ச்சி அடைந்து நீங்கள் யார்?

உங்க பெயர் என்ன என்று கேட்டான் ராஜா அதற்கு

அம்மு வருவாங்க என்ற மெசேஜ் மட்டுமே அனுப்பி விட்டு. அப்புறம் எதுவும் பதில் சொல்ல வில்லை. அது அனுஸ்ரீ தான் அனுப்பி இருப்பாளோ என்ற சந்தேகம் அவனுக்குள் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.

சரி அப்படி அனுஸ்ரீ உயிருடன் திரும்பி வந்து ராஜா வின் எதிரில் நின்றால் ராஜா ஏற்றுக்கொள்வாரா சார்.

அது தான் இப்போ அவனுக்கு ஏற்பட்ட ஒரு தர்ம சங்கடமான

சூழ்நிலை காரணம் ராஜா பைத்தியம் என்று தெரிந்தும், மன நிலை பாதிக்கப்பட்ட நிலை யில்.

அவனை ஒரு தாய் போல் பார்த்து அவனையே சுற்றி வந்த ஜெயஸ்ரீ. அவனை நம்பி அவனுக்காகவே அவன் அருகில் இருந்து வரும், காதலித்து வரும் அவளை எப்படி ஏற்றுக்கொள்ளமல் இருப்பான்.

இப்போ அவன் நிலை எப்படி என்று நீங்கள் உங்க ஆட்டோகிராப் கதை மூலம் சொல்லி விடுவீங்களா?

ம்ம்ம் பார்ப்போம்.

இன்னும் காலம் நிறைய இருக்கு?

அப்போ நாங்கள் கிளம்புறோம் சார் மிக்க மகிழ்ச்சி நன்றி.

ஓகே மேடம்.....

ராஜாவுக்கு போன் மெசேஜ் யாராக இருக்கும் பார்க்கும் ஆவலில் போகிறான் அவன்.....

***-**************************************************

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...