"என்னைக் கொன்னுட்டு உன்னால வாழ முடியாது அமர்... உனக்கே அது தெரியும். ஏன்னா, நீயும் என்னைத் தீவிரமா காதலிக்கிறன்னு எனக்குத் தெரியும்."
அமரின் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது. துப்பாக்கியின் விசையை (Trigger) அழுத்த முடியாமல் அவனது விரல்கள் நடுங்கின.
அமரின் கண்கள் மலரின் கண்களை மட்டுமே உற்றுப் பார்த்தன.
அந்தப் பங்களாவிற்கு கீழே துப்பாக்கி, கத்திகளுடன் அமரின் ஆட்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டிருந்தனர். திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க, பதறிய அடியாட்கள் மேலே பார்த்தனர். பங்களாவின் மேற்கூரையில் இருந்த புறாக்கள் சிதறிப் பறந்தன.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners