You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஉலக சமூகத்தில் மக்கள் எண்ணற்ற விதத்தில் பிரிவினையின் அடிப்படையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.சமூக அறிவியல் சார்ந்த பாடங்கள் ஆராய்ச்சியின் வளர்ச்சி மூலமாக புதிய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் விளக்கத்துடன் அளித்து வருகின்றன.சமூக அறிவியலில் உள்ள பாடங்கள் பெருமளவில் மனிதனையே மைய்யமாக கொண்டு வளர்ந்து வருகின்றன.மனிதனை அடிப்படையாக கொண்ட சமூக அறிவியலில் ஆராய்ச்சி என்பது கோட்பாடுகளின் வாயிலாக மாறிவருகிறது.நாகரீக வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழிற்நுட்ப மேம்பாடு நவீன காலத்தில் பலவித சிக்கல்கள் கொண்ட பிரச்சினைகளை கட்டவிழ்த்து விடுகின்றன.இவ்வகையான பிரச்சினைகளுக்கு சமூக அறிவியலில் நடத்தபெற கூடிய ஆராய்ச்சியின் முடிவுகள் நல்லதொரு தீர்வாக அமைகின்றன.தமிழில் ஆராய்ச்சி முறைமைக்கென்று குறைவாகவே புத்தகங்கள் உள்ளது.இப்படைப்பு அக்குறையை தீர்க்கும் விதத்தில் படைக்கப்பட்டுள்ளது எனலாம்.ஆராய்ச்சி முறைமைகள்,கருதுகோல்கள்,மாதிரிகள்,பழமைவாதம்,பகுப்பாய்வு போன்ற கருத்துகள் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.முனைவர் பட்டத்தை சமூக அறிவியல் ஆராய்ச்சியில் பெற விரும்புவர்கள் இப்புத்தகத்தை படித்து பயன்பெறலாம்.
கு. செந்தில் குமார் / பா. ஆவுடையம்மாள்
முனைவர்.கு.செந்தில்குமார் தற்சமயம் அழகப்பா பல்கலைகழகத்தில் அரசியல் & பொது நிர்வாக துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.குடிமை பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்ச்சி அளித்து கொண்டிருக்கிறார்.பல ஆராய்ச்சி கட்டுரைகளை பான்னாட்டளவில் பிரசுரித்த இவர் சமீபத்தில் ஜோஹன்னஸ்பர்க் பல்கலைகழகத்தில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்பித்துள்ளார்.இவருடைய சமீபத்திய வெளியீடு மேற்கத்திய அரசியல் சிந்தனையாகும்.பன்னாட்டு உறவுகள்,மனித உரிமைகள் போன்ற பிரத்யோக பாடங்களில் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறார்.
முனைவர்.பா.ஆவுடையம்மாள் அழகப்பா கலை கல்லூரி வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பராசக்தி கல்லூரி,குற்றாலத்தில் முதுகலை பயின்று பின்னர் அய்யம் நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் எம்.பில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார்.முனைவர் ஆராய்ச்சியை அண்ணாமலை பல்கலைகழகத்தில் வெற்றிகரமாக முடித்த இவர் பல ஆய்வு கட்டுரைகளை பிரசித்தி பெற்ற கல்வி இதழ்களில் வெளியிட்டுள்ளார்.பிரத்யோக பாடங்களாக வங்கியியல் தணிக்கை மற்றும் கணக்கீடு போன்ற ஆராய்ச்சியில் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.