Share this book with your friends

Pudavi / புடவி சிந்தனையே மனித வாழ்க்கைக்கான திறவுகோல்

Author Name: S.sarathkumar | Format: Paperback | Genre : BODY, MIND & SPIRIT | Other Details

மாயை சூழ்ந்திருக்கும் இத்தரணியில் மனிதர்கள் தொடர்ந்து விழிப்படைந்துகொண்டே இருக்கிறார்கள். விழிப்படைந்த பலர் மனித இனத்தின் வாழ்வியல் கட்டமைப்பை பற்றிய புரிதலைப் பல கோணங்களில் அலசி ஆராய்ந்து மக்களிடத்தில் கூறியுள்ளனர். அவர்களைபோல் விழிப்படைந்த என் மனதில் உள்ள நம் வாழ்க்கை பற்றிய உணர்வின் புரிதல்களையும், இந்த லௌகீக கட்டமைப்பின் நம்மை சுற்றி நடக்கும் ஆன்மிக அரசியலையும், மத அரசியலையும், நாட்டரசியலையும், நம் வாழ்க்கையின் அரசியலையும் இந்நூலின் வாயிலாக உங்களிடம் கூறி உள்ளேன்.  

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 321

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சி.சரத்குமார்

வாழ்வில் தன் ஆசைகளை நிரைவேற்றி மகிழ்ச்சியாக வாழவேண்டும் என விரும்பி வேலைக்கு சென்று கொண்டிருந்த ஒரு இளைஞ்சனின் மனம் திடீரென்று பார்வை மாற்றத்திற்கு உள்ளானது. அந்த மாற்றம் மனித வாழ்க்கை சார்ந்து பல புரிதலை ஏற்படுத்தியது. அதை எழுதி வைப்போம் என எழுத தொடங்கிய பதிவு தான் இன்று புடவு நூலாக வெளிவந்துள்ளது.

மாயையை உணராத வரை நம்முடைய வாழ்க்கை பயணம் என்பது குதிரைகளுக்குக் கடிவாளம் மாட்டிய பயணம் தான். அதாவது இயந்திர வாழ்க்கைதான். எந்த தருணம் நம்முடைய வாழ்கையில் மாயையை உணருகிறோமோ அந்த தருணத்திலிருந்து நம் தனிப்பட்ட வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்படும். அது இதுவரை மறைவில் இருக்கும் வேறு ஒரு உலகத்தை நம் முன் காட்சிப்படுத்தும். அப்பொழுது மறைவில் இருக்கும் உலகத்தை அனைவரும் பார்க்க வேண்டும் எனச் சொல்லி நம் மனம் ஏங்கும். அவர்களில் ஒரு மனமே என் மனமும். புடவி நூலைப் படித்துப்பாருங்கள். அந்த உலகைக் காண முயலுங்கள். நன்றி.

Read More...

Achievements