வழக்கமான ஒரு மாலை நேரத்து அரட்டைக் கச்சேரியில் நண்பர்களிடையே இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு. நம்மாழ்வார் அவர்களைப் பற்றிய பேச்சு எழுந்தது. அவர் மரங்களுடன் பேசி பட்டுப் போகும் தருவாயில் இருக்கும் மரத்தையும் மீண்டும் துளிர்க்க வைப்பார் என்று நண்பர் ஒருவர் சொல்ல மற்றவர்கள் ஓ என அலட்சியமாக சிரித்தனர். அந்த அலட்சியம் எனக்கு கோபத்தை வரவழைத்தது.
“ஏன் சிரிக்கிறீர்கள் மரத்துடன் பேசுவது அப்படி ஒன்றும் மாபெரும் குற்றம் இல்லையே?”
“குமா