Share this book with your friends

Periyarin Kavithaigal! / பெரியாரின் கவிதைகள்! (முத்தமிழ்ப் பேசும் முத்துக்கள்)

Author Name: P. Periyar Mannan | Format: Paperback | Genre : Poetry | Other Details

இந்நுாலிலுள்ள ஒவ்வொரு கவிதையும் ஆழமாய் படித்தால், படிக்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தம் பொதிகிறது.   எழுத்துகள் எழுதுபவரின் திறமையை மாத்திரம் வெளிக் கொண்டு வருவதாக இருக்கக்கூடாது. நிறைய எழுத்தாளர்கள் தங்கள் புலமையைக் காட்டும் நோக்கில், படிப்போருக்கு புரியாத வாசகங்களைக் கையாண்டு அலுப்பை ஏற்படுத்தி விடுவார்கள்! இந்நுாலாசிரியர் கவிஞர். பெ.பெரியார்மன்னன், முற்றாக அதிலிருந்து மாறுபடுகிறார்! கவிதைகளை இலக்கிய நயத்தோடு மாத்திரம் இவர் படைக்கவில்லை, எளிய நடையில் இனிப்பு சொட்டும் இன்பத்தமிழில் சுறுசுறுப்பான வாசிப்பாக அமைத்திருக்கிறார். இந்த பெரியாரின் கவிதைகள் நுாலில், 43 பல்துறை வித்தகர்களையும், பல துறைகளையும் பற்றியது! மழலைக்கவியிலேயே மறைந்திருந்து பார்க்கும் மர்மத்தை வைப்பவர், இந்த வித்தகக் கவிதைகளிலே எத்தனை வித்தையை காட்டியிருக்கிறார் என்பதை சுவைத்துப்பாருங்கள்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

கவிஞர்.பெ.பெரியார்மன்னன்

இந்நுாலாசிரியர் கவிஞர்.பெ.பெரியார்மன்னன், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். சிறந்த கல்வியாளர்.  மழலைக்காவியம், கிள்ளைமொழி, ஊஞ்சல் ஆகிய குழந்தைகளுக்கான சிறார் பாடல் நுால்களை எழுதியவர். ‘மழலைக்காவியம்’ நுாலில் இருந்து 3 கதைப்பாடல்கள் சாகித்ய அகடமி சிறுவர்கள் கதைப்பாடல் தொகுப்பு நுாலில் இடம்பெற்றுள்ளது. ‘கிள்ளைமொழி’ நுாலுக்கு சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருது கிடைத்துள்ளது. இவரது ‘பேசும் மெளனங்கள்’ (கவிதை), ‘விந்தை மனிதர்கள்’ (கட்டுரை), மற்றும் ‘வியப்பூட்டும் வழிபாடுகள்’ (ஆன்மீகம்), ‘பெரியாரின் கவிதைகள்’ ஆகிய நுால்கள் இணையத்தில் விற்பனையாகி வருகிறது. 

Read More...

Achievements

+8 more
View All