Share this book with your friends

Tamil Kolangal / தமிழ் கோலங்கள் elimaiyana Alagaana kolangal

Author Name: Santhosh Shandeep | Format: Paperback | Genre : Others | Other Details

மார்கழி முப்பதுநாளும்
வாசலில் விழாக்கோலம் !

வாடை வாட்டினாலும்
வாடாத வசந்தகாலம் !

மங்கையர் கைவண்ணம்
முற்றத்தில் அரங்கேறும் !

மாவிலைத் தோரணமும்
மாக்கோலம் அலங்கரிக்கும் !

தோட்டத்துப் பூக்களெல்லாம்
கோலங்களில் மலர்ந்திருக்கும் !

விருட்சக் காய்கனியும்
வீதிதனில் கனிந்திருக்கும் !

கானகத்து விலங்குகளும்
சாலையோரம் நடமாடும் !

ஆநிரையும் ஆர்வமுடன்
வீட்டின்முன் விளையாடும்!

பட்சிகளும் மீனினமும்
புள்ளியிலே துள்ளியாடும்!

பதுமையும் பாவையும்
பவிசாக பவனிவரும் !

கடவுள்கூட சிலநேரம்
கண்முன்னே காட்சிதரும் !

எண்ணங்கள் வெளிப்படுத்த
வண்ணங்கள் எழிலூட்டும் !

விடியலில் விரல்சிற்பம்
விதவிதமாய் தினம்சிரிக்கும் !

அற்புதமானது கோலக்கலை !
அணங்குகளுக்கது கைவந்தகலை !

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சந்தோஷ் சந்தீப்

ஆடிப்படையில் ஓர கிராஃபிக் டிசைனர்
மற்றும்  சிறந்த ஓவியர் இவர்
தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.
துற்போது சிறு சிறு கதாபத்திரங்களில்
நடித்தும், இயக்கியும் வருகிறார்.

இவருக்கு
சிறு வயதிலிருந்தே
நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. கவிதைகள் வாசிப்பதும் எழுதுவதும்
மிகவும் பிடிக்கும்.

அவ்வப்போது எழுதி வைத்த
கவிதைகளைத் தொடக்கமாக கொண்டு
ஒரு புத்தக வடிவில் கொண்டு
வரப் பயணித்த பயணமே
இந்தப் புத்தகம் பிறந்த கதை.

Read More...

Achievements