You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palதேனும் தமிழும்.. எனது நான்காவது கதை.
கனிந்த மனம் கதையின் இரண்டாம் பாகம். இதில் முதல் பாகத்தின் துணை கதாபாத்திரங்களான வேலு, வேணி, கர்ணா, ஜெயந்தி, காசி, மீராவிற்கு முதலில் பார்த்த வரனான குமரன்.. இவர்களுடன் இன்னும் சிலர் கதையின் முக்கிய பாத்திரங்களாக மாறுகின்றனர்.
நாயகன் நாயகி என்று இதில் எவருமில்லை கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாயகன் நாயகிகள் தான். இவர்களுடன் மீரா கிருஷ், விஷ்வா கங்கா தங்களின் வாரிசுகளோடு இந்த பாகத்திலும் பயணிக்கின்றனர். இந்த கதையில் முதல் பாகத்தின், முடிவு அறியப்படாத அரசநல்லூரில் நடந்த வேலுவின் பஞ்சாயத்து, வேலு வேணிக்கு முடிச்சிடப்பட்ட திடீர் திருமணம், அதற்கான காரணங்கள், அத்தோடு வேலு தன் காதலை வேணியிடம் தெரிவித்தானா? வேணி ஆடவனின் மனம் அறிந்து, அதை ஏற்றாளா?
கர்ணாவின் காதலுக்கு ஜெயந்தியின் பதில் என்ன? அதை அறிந்தால் ஜெயந்தியின் தமையன், காசியின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?
சென்ற கதையில் முதல் அத்தியாயத்தில் கங்காவின் கணவனுக்கு.. கும்ப மரியாதை செய்வதாக வாக்களித்த மீரா, அதை செய்தாளா? ஊரார் அதனை ஏற்றனரா? என்ற கேள்விகளுக்கான விடையினையும்..
கதையின் தலைப்பிற்கு உரிமையாளர்களான தேனும் தமிழும் யார் யார்? அவர்களின் குடும்பப் பின்னணி, அவர்களுக்கிடையேயான அன்பு, புரிதல், உறவு, உண்மை, பொய், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், விட்டுக்கொடுத்தல், கோபம், ஏக்கம், காத்திருப்பு, பயம், காதல் போன்றவற்றை கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்..
தேன் தமிழ் இரண்டும் (காதல் உறவு அன்பு) பொதுவானது.
தேன் தூய்மையானது, திகட்டாதது..
தமிழ் அமரத்துவம் வாய்ந்தது, பிரதிபலன் எதிர்பாராத அன்பும் அப்படியானதே..
நந்தினி சுகுமாரன்
வணக்கம் தோழமைகளே..
நான் நந்தினி, இல்லத்தரசி. நேரம் கடத்துவதற்காக கதைகளை வாசிக்க துவங்கி, அதில் ஆர்வம் ஏற்பட்டது. பின் அதுவே என் முழுநேர சுவாசமாகி போனது. பல எழுத்தாளர்களின் கதைகளை தேடி தேடி படித்து, தமிழையும் அதன் சுவையையும் உணர்ந்து கொண்டேன். வாசித்த கதைகளின் தாக்கத்தால் எனக்குள்ளும் கற்பனைகள் வளர துவங்கின. அதை வெளிப்படுத்தும் வழியறியாது ஆண்டுகள் கடந்து விட, தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது கற்பனை உருவங்களுக்கு, பெயர் அடையாளம் உணர்வுகள் கொடுத்து.. கதையின் மூலமாம் நடமாட விட்டுள்ளேன். உங்களுக்கும் இந்த நிழல் உருவங்கள் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
என்றும் உங்கள்..
நந்தினி சுகுமாரன்.
The items in your Cart will be deleted, click ok to proceed.