Share this book with your friends

THUMBAI POO (Novel) / தும்பைப் பூ நாவல்

Author Name: Narana Duraikannan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இருபது ஆண்டுகளுக்கு முன், திருச்சிராப்பள்ளியில் நண்பர் ஒருவருக்கு நடந்த திருமணத்துக்குப் போய்விட்டுச் சென்னை மாநகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தையடைந்ததும் பயண அலுப்புத் தாங்காமல் அவசரமாக வண்டியை விட்டு இறங்கலானேன். நான் அமர்ந்து வந்த பெட்டிக்கு முன்னுள்ள பெண்கள் பெட்டியிலிருந்து ஏராளமான பெண்கள் இறங்கினர். இக்கூட்டத்தில் தென்பட்ட ஒரு முதியமாதும் இளமங்கையொருத்தியும், என் கவனத்தைக் கவர்ந்தனர். தாயும் மகளும் போலிருந்த இருவருமே விதவைகளாயிருந்தனர். பதினெட்டு வயது கூடச் சரியாக நிரம்பாத அந்த இளம்பெண் துவைத்துக் காவியேறிய வெள்ளைப் புடைவை கட்டிக் கொண்டிருந்தாள்.

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நாரண துரைக்கண்ணன்

நாரண. துரைக்கண்ணன் (ஆகஸ்ட் 24, 1906 - ஜூலை 22, 1996) தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஜீவா என்ற புனை பெயரில் எழுதியவர். சி​று​க​தை​கள்,​​ புதினங்கள்,​​ தலை​வர்​கள் வர​லாறு,​​ நாட​கம்,​​ கவிதை,​​ அர​சி​யல் தலை​யங்​கம் என்று பல்​வேறு இலக்​கி​யத் துறை​க​ளில் எழுதியவர்.

Read More...

Achievements

+15 more
View All