Share this book with your friends

kadhal nanaigiradhu / காதல் நனைகிறது காதல் கவிதைகளின் தொகுப்பு

Author Name: Imalayen | Format: Paperback | Genre : Poetry | Other Details

காதல் நனைகிறது என்னும் இந்த கவிதைத் தொகுப்பின், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை அத்தனையும் காதல் கவிதைகளாக தான் இருக்கும். ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் தோன்றும் காதல் அது தரும் சுகம் வலி இன்பம் துன்பம் என்னும் பல்வேறு உணர்வுகளை சில இடங்களில் நகைச்சுவையாகவும் சில இடங்களில் அறிவியல் கலந்தும் சில இடங்களில் கற்பனையை ஊற்றியும் இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன்.  வெகுநாட்களாகவே ஒரு முழு புத்தகமும் காதல் கவிதைகளை கொண்டிருக்க வேண்டும் என்னும் என் பெரும் கனவிற்கு நோசன் பிரஸ் பப்ளிகேஷன்ஸ் மிகப்பெரிய வரப்பிரசாதம் எனக்குத் தந்திருக்கிறது. இந்த கவிதை புத்தகத்திற்கு மதிப்பிற்குரிய வழக்கறிஞர் திரு ஜி காளிதாசன் ஐயா அவர்கள், மதிப்பிற்குரிய மற்றும் வணக்கத்திற்குரிய பேராசிரியர் முனைவர் திருச்சூர் அமல்ராஜ் ஐயா அவர்கள், இனிய நண்பர் திரு ஸ்டாலின் ஆரோக்கியராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கி என்னை பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்திற்கு பெரும் உதவியாகவும் வடிவமைப்பு மற்றும் தட்டச்சு பணிகளை மிக நேர்த்தியாக செய்து முடித்த என்னுடைய உதவியாளர் பாசத்திற்குரிய தம்பி பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். வாங்கிப் படியுங்கள் இந்த புத்தகத்தை காதல் கவிதைகளில் மழை உங்களையும் நனைக்கட்டும்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

இமாலயன்

இமாலயன் என்னும் புனை பெயருடன் சென்னையில் வாழும் எனது இயற்பெயர் எனது பெற்றோர் வைத்த பெயர் அந்தோணி குமார். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் படித்தவன். சென்னையில் என் பெற்றோருடன் என் அன்பான காதல் மனைவியுடன் என் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய ஆரம்பக்கல்வியை ஸ்டெல்லா மேல்நிலைப் பள்ளி பிரசெண்டேஷன் கான்வென்டில் படித்தேன் அங்கு என்னை பெருமளவு ஊக்குவித்த மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் திருமதி உஷாராணி எனது முதல் தமிழ் ஆசிரியை இரண்டாவதாக திருமதி பத்மாவதி எனது வேதியியல் மற்றும் அறிவியல் ஆசிரியை இவர்கள் ஊற்றிய அறிவு தீயின் ஆரம்பத்தில்  வளர தொடங்கினேன். என்னுடைய பள்ளி இறுதி வகுப்பு களை சென்னையில் உள்ள தூய தோமா மேல்நிலைப்பள்ளியில் படித்தேன் அங்கு என்னை பெருமளவு ஊக்குவித்த ஆசிரியர்கள் ஆசிரியர் தென்றல் மதிப்பிற்குரிய திரு அல்பிரட் தேவனேசன் அவர்கள் எனது தமிழ் ஆசான், மரியாதைக்குரிய ஆசிரியர் திரு ஜான் ரத்தினராஜ் எனது வணிகவியல் ஆசிரியர், என்னது விலங்கியல் படிப்பை பொருளியல் பாடத்தில் புகழ்பெற்ற சென்னை இலயோலா கல்லூரியில் படித்தேன், என்னை பெருமளவு ஊக்குவித்த கல்லூரி முதல்வர் பாதிரியார்கள் அனைவருக்கும் என் நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். டி படத்தக்க வகையில் இன்றைக்கு அடைந்த உயரங்களில் பெரும் பங்காற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர் பேராசிரியர் முனைவர் திரு அமல்ராஜ் அவர்கள் தமிழ்த்துறை பேராசிரியர், பெறுவதும் ஊக்கப்படுத்திய பேராசிரியர் முனைவர் திரு யூஜின் அவர்கள் பொருளியல் துறை. என்னுடன் பணியாற்றிய ஆசிரியர் திரு கண்ணன் அவர்கள் மற்றும் வழக்கறிஞர் காளிதாசன் அவர்கள் இருவரும் எனது நலம் விரும்பிகள். ஏற்கனவே ஏழு புத்தகங்களை எழுதியுள்ளேன் நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். எனது வாழ்வின் கடைசி மூச்சு இருக்கும் வரை எழுத்துப் பணியை கைவிடாமல் எழுதிக்கொண்டே இருப்பேன். இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரையும் நான் அதிகமாக நேசிக்கிறேன் ஆனால் என் தமிழ் சமூகத்து மக்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன். இறுதியிலும் உறுதியாக எல்லாம் வல்ல இறைவன் எனக்கு தந்த இந்த ஞானத்திற்கான என்னை வடிவமைப்பதற்கு அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Read More...

Achievements

+3 more
View All