“கலங்கிய கண்கள்” எனும் தலைப்பில் என் தாயார் என் பொருட்டு செய்த தியாகத்திற்கு காணிக்கையாக இந்த நாவலை படைத்துள்ளேன். அவள் என் மேல் கொண்ட அளவிலா பாசம், அன்பு இவைகளை வார்த்தைகளால் வடிவமைக்க முயற்சி செய்துள்ளேன். இந்த நாவலில் படிப்போர் மனதில் பெற்றோரை பத்திரப்படுத்த வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக உணர செய்துள்ளேன்.
நான் என் தாயுடன் பயணித்த அனுபவங்களை எழுத்தாக்கி “கலங்கிய கண்கள்” எனும் தலைப்பில் அர்ப்பணித்துள்ளேன். இந்நாவல் படிப்போர் அனைவரையும் உருக வைக்கும். கல் நெஞ்சையும் கறைய வைக்கும். இந்த நாவல் “கலங்கிய கண்கள்” யாரையும் அழ வைப்பதற்காக படைக்கவில்லை. பெற்றோரை தொழ வைப்பதற்காகவே சமர்ப்பிக்கிறேன்.
தாய்மையின் மாண்பினை உணர்த்தும் வகையில் இந்த நாவலை அற்புதமாய் வெளியிட முயற்சி செய்துள்ளேன். இன்றைய தலைமுறையினர் படித்து பந்தம், பாசம் என்பதை உணர்ந்து கொள்ள மிக சிறந்த நாவலாகும்.
மிக சிறந்த பாச படைப்பினை கொண்ட இந்த நாவல் என்றுமுள இன்தமிழரிய வாசகர் மனதில் தங்கி நிற்கும். எந்த சூழ்நிலைகளிலும் பெற்றோரை கைவிடுதல் கூடாது அதுவே நம்மை போற்றி வளர்த்து சிறப்பித்தவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதான் என்னும் கருத்தை ஆழமாக பதித்துள்ளேன்.
படியுங்கள்! பெற்றோர் மலரடி வணங்குங்கள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners