Share this book with your friends

Maavendhan / மாவேந்தன்

Author Name: ThirumuruganKalilingam | Format: Paperback | Genre : Poetry | Other Details

தொண்டு நிலம் மட்டுமல்ல; தோராயமான நிலம் மட்டுமல்ல. தொங்கும் நிலம் முழுவதிலும் இருக்கு எங்கள் தொண்டு. 

ஆகையால் தொங்கும் நிலம் முழுவதும் எமக்கு. 

அவ்வாறிருந்தும் வடக்கு, கிழக்கு மட்டுமே கேட்டோம். தர மறுத்தது சிங்களம்.

எங்கள் வடகிழக்குப் பருவமழையைப் பொய்த்து போகச் செய்த பேரினவாதத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி ‘விடுதலைப்புலிகள்’ எனும் புரட்சிப்படையை உருவாக்கி பாசிச சிங்களத்தின் மேல் போர்தொடுத்து எத்தனையோ வீரச்சமர்கள், தியாகங்கள், ஊடறுப்பு வியூகங்கள் நடத்திக் காட்டி வெற்றி கண்டவர் ‘மாவேந்தன்’ வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். 

தமிழீழ நிலம், அதை ஆளும் மாவேந்தனாய் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவர் கட்டமைத்த விடுதலைப்புலிகள் எனும் படை என இம்மூன்றையும் உள்ளடக்கிய புவியே இப்படைப்பு‌. 

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

திருமுருகன்காளிலிங்கம்

தாய் மண்ணையும் தன் பேரினத்தையும் சுவாசித்து நிற்பவர். மண், மக்கள், புரட்சி இம்மூன்றையும் தன் மதி வழி ஏற்றி விரல் வழி படைப்பாகக் கொடுப்பதில் வல்லவர்.

இவரின் அகவையை மனதில் கொண்டு இவரின் படைப்புகளை படித்தால் நமக்கு இவருடைய படைப்புகள் புதுமையாகத் தோன்றும்; இவரின் படைப்புகளை மனதில் கொண்டு இவரின் அகவையை கணக்கிட்டால் நமக்கு இவருடைய அகவை பழமையாகத் தோன்றும். 

கருத்தியலின் குரல்வளைக்கு புது இரத்தம் பாய்ச்சுகிறது இவரின் படைப்புகள். ஆதலால் இவருடைய படைப்புகளை தமிழ்த்தேசியம் ‘தனது’ என்று உரிமைக் கொண்டாடுகிறது!

Read More...

Achievements

+11 more
View All