சட்டத்திற்கு சாட்சியே மிகமிக முக்கியமானதாகும். சாட்சி இல்லாத போதும், சாட்சி பிறழ் சாட்சியாக மாறும் போதும் குற்றவாளி விடுவிக்கப்பட்டுவிடுவார். ஏனெனில் சந்தேகத்தின் பலன் குற்றவாளிக்கே சாதகமாக இருக்கும். பணம், கொடுக்கல், வாங்கல், அடி,தடி, அவதூறு என எவையாகினும் சாட்சி தான் முக்கியம். அதிகாரத்தை வைத்து வழக்கு பதிந்து விடலாம், குற்றம் சுமத்தி விடலாம், ஆனால் குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து தண்டனை பெற்றுத் தந்திவிட முடியாது. மேலும் சேகரிக்கப்பட்ட சாட்சியத்தை அழிந்துவிடாத வண்ணம் பாதுகாத்து வைத்தலுமே தான் மிகமிக முக்கியமானதாகும். எனது இந்த 25வது நூல் குறைந்த பக்கங்களே கொண்ட நூலாக இருந்தாலும் மிக முக்கியமான விவரங்களை கொண்டிருக்கும். அனைவரும் படித்து பயன் பெறுங்கள்.