Share this book with your friends

Sivappu Udai Devadhai - Tajmahal Nizhal ( 2 Novel Combo) / சிவப்பு உடை தேவதை - தாஜ்மஹால் நிழல் ( 2 நாவல் தொகுப்பு)

Author Name: Rajeshkumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

விவேக் ரூபலா விஷ்ணு துப்பறியும் நாவல்கள்  
இந்தப் புத்தகத்தில் 2 க்ரைம் கதைகள் உள்ளன.
ஒவ்வொன்றும் அதிரடி ஆக்ஷன் திரைப்படத்திற்கு இணை.

விவேக் ரூபலா விஷ்ணு பற்றி ராஜேஷ்குமார் வாசகர்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் புதிதாக வாசிக்க ஆரம்பித்தவர்களுக்கு இவர்கள்  யார் என விளக்கும் ஒரு  சிறு குறிப்பு. 

விவேக்: ஆரம்பத்தில் சிஐடி ஆஃபிஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD எனப்படும் ஸ்பெஷல் க்ரைம் டிவிஷன் ஆஃபீஸர். SCD என்பதின் விரிவாக்கம் Special Crime Division என்பதாகும். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் சீரியஸ் க்ரைம்ஸ் Serious Crimes எதுவாக இருந்தாலும் சரி, அதை இன்வெஸ்டிகேட் செய்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதுதான் ஒரு எஸ்.சி.டி ஆஃபிஸரின் பணி.அதைத்தான் விவேக் இப்போது செய்து கொண்டிருக்கிறார். என்றுமே இளமையாய் இருப்பதால் விவேக்கின் பிறந்த தேதி, வருடம் பற்றி நீங்கள் யாரும் கேட்க அனுமதியில்லை. 

ரூபலா: ஹோம் சயின்ஸ் படித்த அதி அழகான ரூபலாவிற்கு காவல்துறையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்கிற ஆசை.ஆனால் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காததால், அந்த ஆசை நிராசையாகிவிட விவேக்கின் திறமையை காதலித்து மிஸஸ் விவேக்காக மாறியவள்.விவேக் துப்பறியும் மிகவும் சிக்கலான வழக்குகளை தானும் உள்வாங்கிக் கொண்டு அவ்வப்போது டிப்ஸ் கொடுத்து அணில் போல் உதவிக்கொண்டு இருப்பவள். 

விஷ்ணு : விவேக்கிடம் பணிபுரியும் ஓர் உதவிஅதிகாரி. கிட்டத்தட்ட விவேக்கின் நிழல்.பேசும் பேச்சில் கொஞ்சம் விளையாட்டுத்தனம் இருந்தாலும், அதில் விஷயம் இருக்கும். மூச்சுத் திணற வைக்கும் சிக்கலான நேரங்களில் ஆக்ஸிஜனாய் இருப்பவன்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ராஜேஷ்குமார்

திரு ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஆர் கே ராஜகோபால். பின்னர் எழுத்துக்காக ராஜேஷ்குமார் எனும் புனைப்பெயர் கொண்டார். இதுவரை 1500 நாவல்கள் 2000 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைத்தவிர நூற்றுக்கணக்காண அறிவியல்,ஆன்மிக மற்றும் வாழ்வியல் கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!” , “வாவ் ! ஐந்தறிவு”, " எஸ் பாஸ்" “சித்தர்களா! பித்தர்களா!!” முக்கியமானவை.  " என்னை நான் சந்திததேன்" என்ற தலைப்பில் தன் வாழ்க்கையில் நடந்த  நிகழ்வுகளை சுவராஸ்யமான நடையில் எழுதியுள்ளார்.இது சுயமுன்னேற்ற நூலாகவும் பார்க்கப்பட்டு பாராட்டப்படுகிறது.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தன் தந்தை செய்த கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர், அதை கவனித்தபடியே கதைகள் எழுதினார்.இவரின் முதல் சிறுகதை 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. நாவலின் தலைப்பு வாடகைக்கு ஓர் உயிர். 

அதே 1980வது வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப் என்ற முதல் தொடர்கதை வெளியானது.1980லிருந்து 1995 வரை தமிழ்நாட்டில் 41 மாத நாவல்கள் வெளிவந்தன. அனைத்திலும் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதியதின் விளைவு 1998ம் ஆண்டே 1000மாவது நாவலைத் தொட்டுவிட்டார்.

இவரது எழுத்து படிக்க எளிமையாகவும், படித்தவுடனேயே புரிந்து கொள்ளும்படியாக இருப்பதால் பாமர வாசகர்களும் படிக்கிறார்கள். அதேபோல் பல்துறை வல்லுனர்களும் படிக்கிறார்கள் வாசிக்கிறார்கள்.சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும்,நாவல்களும் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இவருடைய நாவல்களை பல பல்கலைக்கழக மாணவர்கள் பி.ஹெச்டி படிப்பில் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு டாக்டர் பட்டம் பெற்று இருப்பது சிறப்பு.இவருடைய நாவல்கள் பல திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புக்கள் அச்சுப்புத்தகங்களாக மட்டுமின்றி மின்புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கின்றன. 

எழுத்துலகில் இவர் ஆற்றிய சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது

Read More...

Achievements

+8 more
View All