தமிழர்களது வாழ்க்கை முறையானது தங்களது வாழும் சூழலுக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐம்பிரிவுகளாக பகுக்கப்பட்டு ஒரு வரையறைக்குட்பட்ட வாழ்வியலைக் கொண்டிருந்தது. அங்கு பண்பாடுகள் போற்றப்பட்டன. அறநெறிகள் தழைத்தோங்கின.
ஆனால் இன்றைய சூழலில் நவீனத்துவம் என்ற பெயரில் மொத்தத்தையும் இழந்துவிடும் சூழலில் தமிழ்ச்சமூகம் தவித்துக்கொண்டு இருக்கிறது. குடும்ப உறவுகள் சீர்குலைந்து, கூட்டுக்குடும்ப வாழ்வியல் உருக்குலைந்து ஏதோ... அங்கொன்றும், இங்கொன்றுமாக அருங்காட்சியகங்களில் காணப்படும் காட்சிப்பொருளைப்போல குடும்ப உறவுகளைப்போற்றும் குடும்பங்களைக் காண்பதும் அரிதாகவே இருக்கிறது..
தமிழரின் வாழ்வியல் நெறி. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல... இத்தரணிக்கே நன்மை பயப்பதாகும்
மக்களின் வாழ்வியலை எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் சொன்ன மொழி தமிழ்மொழி.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners