Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
எத்தனையோ சுற்றுலாக்களை சென்றிருந்திருப்பீர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் சுற்றுலா சென்றால் எவ்வாறு இருக்கும்? பூமியிலிருந்து ஆரம்பித்து, சூரிய குடும்பம், நமது பால்வ
எத்தனையோ சுற்றுலாக்களை சென்றிருந்திருப்பீர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் சுற்றுலா சென்றால் எவ்வாறு இருக்கும்? பூமியிலிருந்து ஆரம்பித்து, சூரிய குடும்பம், நமது பால்வழி மண்டலம் மற்றும் நமது பிரபஞ்சம் வரை சென்று இவை எவ்வாறு உருவானது? இவற்றில் நாம் நடத்த இருக்கும் ஆய்வுகள் என்ன என்று பல்வேறு விஷயங்களை சுருக்கமாகவும், எளிமையாகவும் தமிழில் விளக்குகிறது "பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா" என்னும் இந்த சிறிய நூல்
விண்வெளிப் பயணங்களின் வரலாறு என்ற இந்த புத்தகம் தமிழில் விண்வெளி பயணங்கள் குறித்து மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலில் விண்வெளி பயணத
விண்வெளிப் பயணங்களின் வரலாறு என்ற இந்த புத்தகம் தமிழில் விண்வெளி பயணங்கள் குறித்து மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலில் விண்வெளி பயணத்திற்கு தேவையான அடிப்படைத் தகவல்கள் குறித்தும், எவ்வாறு விண்வெளிப் பயணத்தின் முயற்சிகள் தோன்றியது என்பதை குறித்தும் எழுதப்பட்டுள்ளது. மேலும் "எவ்வாறு நிலவில் மனிதர்கள் மனிதர்கள் காலடி வைத்தார்கள்? எந்தெந்த கிரகங்களுக்கு மனிதர்களின் ஆய்வுக் கருவிகள் சென்றுள்ளது?" என்பன பற்றியும் மிகவும் தெளிவாக பல சுவாரசிய தகவல்களுடன் விவரிக்கிறது இந்நூல். தமிழில் விண்வெளி குறித்துத் தெரிந்து கொள்ள விரும்பும் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படுவதாக அமையும்.
காலப்பயணம் மக்களுக்கு எப்போதும் ஆச்சர்யம் தரத்தக்க விஷயமாகவே இருக்கிறது. அத்தகைய காலப் பயணம் பற்றிப் புரிந்து கொள்ள கருந்துளைகளைப் பற்றிப் புரிந்து கொள்வதும் அவசியமாக
காலப்பயணம் மக்களுக்கு எப்போதும் ஆச்சர்யம் தரத்தக்க விஷயமாகவே இருக்கிறது. அத்தகைய காலப் பயணம் பற்றிப் புரிந்து கொள்ள கருந்துளைகளைப் பற்றிப் புரிந்து கொள்வதும் அவசியமாகிறது. எனவே கருந்துளைகளைப் பற்றிப் புரிந்து கொள்ளும் விதமான விளக்கங்கள் இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்த கருந்துளைகள் மிகவும் அதிசயமாக ஆய்வாளர்களுக்கு தெரிகிறது. தனக்குள் பல்வேறு மர்மங்களை ஒளித்து வைத்துள்ளது. கருந்துளைகளின் இரகசியங்களைப் புரிந்து கொள்ளும்போது நம்மால் இயற்பியல் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும். எனவே கருந்துளைகளைப் பற்றிய ஒரு தகவல் தொகுப்பினை இந்த புத்தகத்தின் வாயிலாகக் காணலாம். இந்த நூலில் கருந்துளைகள் பற்றிய அடிப்படைக் கருத்துக்களை ஆய்வு செய்துள்ளோம்.கருந்துளைகளில் என்ன நிகழ்கிறது? கருந்துளை எவ்வாறான கட்டமைப்பைக் கொண்டுள்ளது? குவாண்டம் இயற்பியல் ரீதியாக கருந்துளைக்குள் என்ன நிகழ்கிறது? கருந்துளைக்குள் ஒருவர் உள்ளே விழுந்தால் என்ன நிகழும்? என்பது போன்ற விஷயங்களை எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் ஆராய விழைகிறது இந்த நூல்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.