Share this book with your friends

Avvaiyin Gnanakural (Tamil Edition) / ஒளவையின் ஞானக்குறள் தெய்வத்தமிழில் திகட்டாத யோகஞானம்

Author Name: Annamalai Sugumaran | Format: Paperback | Genre : BODY, MIND & SPIRIT | Other Details

ஔவைக்குறள் எனும்  நூலில்  அடங்கியுள்ள 310 குறளில் தமிழ் சித்தர்களின்  மெய்ஞானம் அத்தனையும் சுருங்கச் சொல்லி தெளிவாக்குகிறது இந்தப்புத்தகத்தில்  அதற்கான தெளிவுரை மிக விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளது திருக்குறள் விவரிக்கும்  அறம், பொருள், இன்பம் போன்றே இக்குறள்களும் மானிட தேக அமைப்பு, அதனுள் துலங்கும் ஆதி அறிவு, வாழ்வியல் குறிக்கோள் இவைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.
இன்னும் பிறப்பு இறப்பு  என்றால் என்ன? பஞ்சபூத சேர்க்கையால் இந்த உடம்பு எவ்வாறு உருவாகி, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது? அதன் தலையாய குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும் அதை அடையும் வழி முறைகள் என்ன? வாசியோக நிலை, சரவோடுக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் விளக்குகிறது.யோகத்தில் திளைத்த பல அனுபவபூதிகள் அருளாளர்கள் காட்டிய மார்க்கங்களை விட, ஔவைக்குறள் மிக இலகுவாக யோகத்தின் தன்மையைப் பற்றி விளக்குகிறது.
தமிழர்களின் மெய்யியல் முழுவதும் உணர இந்த ஒரு புத்தகம் போதுமானது .  இதில் 52 குறள்கள் மட்டுமே விரிவாக விளக்கப்பட்டுள்ளது .இதைத்தொடர்ந்துதொகுப்புகள்  மீண்டும் அடுத்து வெளிவரும் .
இது புதுச்சேரியில் வசிக்கும் அண்ணாமலை சுகுமாரன்எனும் தமிழ் சித்தர்நெறி ஆய்வாளர்  எழுதியது 
இதுவும் தொடராக வந்து பலரது பாராட்டைப்பெற்றது ..
இப்போது தொகுக்கப்பட்டு முதல் புத்தகமாக வெளிவருகிறது .
தமிழர்களின் மெய்ஞ்ஞானத் தெளிவிற்கு இந்த புத்தகம் ஒரு சான்றாக விளங்குகிறது .தமிழர்கள் தவறவிடக்கூடாத ஒரு புத்தகம் இது .
தமிழர்கள் அனைவர் வீடுகளிலும் அவசியம் இடம்பெற வேண்டிய புத்தகம் . 

#TamilSongs, #VinayagarAgaval, #Thirumoolar, #Wisdom, #Avvaiyinkural, #avvaiyinkural,
#Nadi, #ChandraNadiPranayama, #chandranadipranayama, #SuryaNadiPranayama, #suryanadipranayama,

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 310

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அண்ணாமலை சுகுமாரன்

அண்ணாமலை சுகுமாரன் வயது 75, புதுவையில் வசிக்கும் இதழாளர் எழுத்தாளர். சுமார் 20 ஆண்டுகளாக தமிழர்கள் இடையே பிரபலமானவர், இணையத்தில் தீவிரமாக இயங்கி வருபவர்.
அவரது பல கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்திருக்கிறது.
பல தமிழ் புத்தகங்கள் முன்பே எழுதி உள்ளார். ஆய்வாளர்,எழுத்தாளர்.
பல சர்வதேச ஆய்வு அரங்கங்களில் பங்கேற்றுள்ளார்.

Read More...

Achievements