Share this book with your friends

KAANAMAL PONA AAGAYAM - IRAVU NERA SURIYAGANDHI / காணாமல் போன ஆகாயம் - இரவு நேர சூர்யகாந்தி இரண்டு நாவல்கள்/2 Novels

Author Name: RajeshKumar | Format: | Other Details

காணாமல் போன ஆகாயம்

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். புலனாய்வு செய்ய வரும் போலீஸ் அதிகாரிகளை பல ஆச்சரியங்களை தலைச்சுற்ற வைக்கிறது...இந்த வழக்கு. காணாமல் போன ஆகாயம்...திரும்பவும் கிடைக்குமா...? இப்போதிருக்கும் தகவல்  தொடர்பு வசதிகள் இல்லாத  காலகட்டத்தில் நடக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர்...மெய்சிலிர்க்க வைக்கும்.

இரவு நேர சூர்யகாந்தி

ஒரு இளம் பெண்ணின் குற்றச்சாட்டில் கதிகலங்கி நிற்கிறது ஒரு காந்தியவாதியின் குடும்பம். அது உண்மையா என அந்த குடும்ப உறுப்பினர்களே தங்களால் ஆன விசாரணை முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். விறுவிறுவென நகரும் கதையில் திருப்பங்கள் உங்களை திக்குமுக்காட செய்யும்.

 

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+8 more
View All