Share this book with your friends

Oru Na(m)barin Thavariya Azaippil / ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில் இணையவலை கட்செவி அஞ்சல்

Author Name: Praveena Thangaraj | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

விழிப்புணர்வுக்கான கதை.

ஸ்மார்ட் போன் வைத்து டெக்னாலஜி சோஷியல் மீடியா என்று எத்தனை வகையில காமுகர்கள் வலை விரிக்கிறாங்கனு நமக்கு தெரியாதது இல்லை. 

      இன்ஸ்டால், ஷேர்சாட், கதைக்குரிய ஆப், கிண்டல், youtube, குகூள், வாட்சப், facebook messwnger, twitter, இன்னும் எத்தனை எத்தனையோ... எல்லாவற்றிலும் முகப்பு படம் மெயில் கமெண்ட்ஸ் செய்யும் பக்கம் மற்றும் தனிபட்ட உரையாடல்(inbox chat), என்று இளைஞர் முதல் நடுத்தர வயது குழந்தைகள் வரை ஆண்களில் காமுகர்கள் பலர் வலை விரித்து எப்ப பறவையான பெண்கள் மாட்டுவார்கள் என்று காத்திருக்கின்றனர். நாம முதல்ல பிரெண்டலியா பேசறதில் என்ன தப்பு, தவறான பேசினா பிளாக்ல போடலாம்னு கூட இருப்போம். பட் எந்த லூப் மூலமாக நம் தனிபட்டவை வெளிப்பக்கம் செல்லாது பாதுகாப்பாக இருங்க.

   நிறைய விழிப்புணர்வு பதிவு பார்க்கறோம், படிக்கிறோம், ஏன் நாம கூட அட்வைஸ் பண்ணறோம். பட் மனசு என்பது ஆசைக் கொண்டது. அது எப்போ தடுமாறும்னு சொல்ல முடியாது. முடிந்தவரை முகமற்றவரிடம் இருந்து ஹாய் ஹலோ எந்த ஊர் என்று ஆரம்பிக்கம் உரையாடலை கண்டு விழிப்படையுங்கள்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

பிரவீணா தங்கராஜ்

ஆசிரியர் உரை


    *ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில் * என்ற நாவலின் எழுத்தாளராக அடையாளப்படுத்தி கொள்ளும் நான் சென்னையில் வசிப்பவள். 

  சிறு வயதில் தங்கமலர் சிறுவர்மலர் கல்கண்டு இதழ் என்று புத்தகம் வாசிக்கும் எனது பயணம் இதோ தொடர்ந்து கொண்டே வந்து நாவல் எழுத்தாளராக உங்களுக்கு அறிமுகமாகின்றேன்.  

     நம் வாழ்வில் சின்ன சின்ன நிகழ்வுகளை சுவைப்பட எழுதி வைப்பதற்கு டைரி தேவைப்படும். அப்படி ஆரம்பித்து எழுத பழகியதே என் எழுத்தின் ஆரம்பம்.

   கல்லூரியில் விளையாட்டாய் கவிதையை கிறுக்கி தோழிகளிடம் காட்டி எனது முதல் கிறுக்கல்கள் ஆரம்பமானது. 

      சின்ன சின்னதாய் வாழ்க்கையில் என்னோடு கலந்தவையை கவிதை மூலம் இயற்றி இரண்டாம் கட்டத்திற்கு வந்தேன்.
சமூகத்தின் மீது எழும் கோபத்தையும், இயற்கையை ரசிப்பதையும், எழுத அடுத்து அத்தியாயமாக காதலையும் எழுத வைத்து கவிதை வடித்தேன்.

   கதை படிக்க ஆரம்பித்து புத்தகப் ப்ரியையான என்னை, கவிதை மட்டுமா? கதையும் எழுது என்ற மனசாட்சியின் தூண்டுதலில் எழுத துவங்கியது.

     நாம் நம் வாழ்வில் பொதுவெளியில், விழாக்களில், நல்லது கெட்டது நிகழ்ச்சியில் என்று பல அனுபவத்தினை உள்வாங்கி, வாழ்வின் பிரச்சனைகளையும் தீர்வாக மாற்றி, நாயகன் நாயகியாய் உருவகித்து பிரச்சனையை அவர்களுக்குள் ஏற்றி, அதற்கு தீர்வும் கொடுத்து நாமும் ஒரு பிரம்மனாய் கதாபாத்திரத்தின் மீது தலையெழுத்தாக எழுதி அவர்களை கதை மாந்தர்களாக நடமாட வைப்பதே ஒரு அலாதி மகிழ்ச்சி.

Read More...

Achievements

+3 more
View All