இந்த உலகில் 1% திக்குவாய் நபர்களாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர், தங்களின் முன்னேற்றத்திற்கு திக்குவாய் பெரிய தடையாக இருப்பதாக கருதுகிறார்கள்.
நேர்காணல் செல்வதற்கு தயங்குகிறார்கள். வேலைக்கு போவதற்கு பயந்து கொண்டு. தேவையில்லாமல் மேலே படித்துக் கொண்டே இருக்கிறார்கள். அல்லது அரசாங்க, வங்கி வேலை தேர்வுகளுக்கு தயார் செய்வதாக கூறிக் கொண்டு, வருடக்கணக்கில் நேரத்தை வீணடிக்கிறார்கள்.
திக்குவாய் மட்டும் தங்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்திருப்போம் என்று கருதுகிறார்கள்.
இதெல்லாம் உண்மையா?
பதில் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா?
அப்போ, இந்த புத்தகம் உங்களுக்காகத்தான்.
இந்த புத்தகத்தில் வாழ்க்கையில் பலதரப்பட்ட 40 திக்குவாய் நபர்கள், அவர்கள் வெற்றி பெற்ற கதைகளை, அவர்களின் சொந்த பெயர்களிலேயே எழுதி இருக்கிறார்கள்.
இந்த புத்தகம் அனைத்து திக்குவாய் நபர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners