Share this book with your friends

Varnaavin Maranam - Dhik Dhik Dhivya ( 2 Novel Combo) / வர்ணாவின் மரணம் - திக் திக் திவ்யா ( 2 நாவல் தொகுப்பு)

Author Name: Rajeshkumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வர்ணாவின் மரணம்

முதல் கிளைக் கதை

ஓர் இரவு வேளையில் ஓர் இளம்பெண் காவல் நிலையத்தை அடைந்து தன் வீட்டின் பக்கத்தில் ஒரு வீட்டில் இளமாறன் என்னும் ஒருவன் வர்ணா என்ற பெண்ணொருத்தியை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறுகிறாள்.அந்தப் பெண்ணுடன் காவல்துறை அதிகாரிகள் அங்குச் சென்றுப் பார்க்கிறார்கள்.

பூட்டிய வீடுதான் கண்ணில் படுகிறது. பூட்டை உடைத்துக் கொண்டுப் போனால் யாரும் கண்ணில்பட மறுக்கிறார்கள். ஆனால் சுவர் எங்கும் ரத்தம் சிதறி கிடக்கிறது.

போலீஸ் விசாரணை ஆரம்பிக்க, அடுத்த நாள் காலைப் பொழுது அவர்களுக்கு ஒரு விபரீதத்துடன் ஆரம்பிக்கிறது.

அது என்ன? அதைச் செய்தது யார்?

அதைத் தொடர்ந்து பல கொலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்க, போலீஸ் மௌனம் காக்கிறது.

திக் திக் திவ்யா

இரண்டாம் கிளைக்கதை

இரு டிடெக்டிவ்கள் ஒரு பெண்ணின் புகாரின் பேரில் வர்ணா யார் என்பதை அறிந்து நடந்து முடிந்த கொலைகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறது. கேள்விகளோடு தேடி கொலைக்குற்றவாளியை அடையும் போது மிகுந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொள்கிறார்கள்.

படிக்க வெளிநாடு சென்ற திவ்யா, தன் எஸ்டேட்டில் நடக்கும் முறைகேடுகளை வேரோடு பிடிங்கி எரிய நினைக்கிறாள். ஆனால் அவளுக்கு தடையாய் நிற்கிறார் அவளின் தாய்மாமன். திவ்யா தன் களை எடுக்கும் பணியை தொடங்கிவிடுவாளோ என்ற அச்சத்தில் அவளைத் தீர்த்துக் கட்ட நினைக்கிறார் தன் சகாக்களுடன்.

அவள் வீட்டை அடையும்முன்னே அவளை கொல்லத் துடிக்கும் தாய்மாமனின் முயற்சி நடக்குமா? அல்லது திவ்யா தன் அறிவால் அவர்களை வெற்றி கொள்கிறாளா?

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

திரு ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஆர் கே ராஜகோபால். பின்னர் எழுத்துக்காக ராஜேஷ்குமார் எனும் புனைப்பெயர் கொண்டார். இதுவரை 1500 நாவல்கள் 2000 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைத்தவிர நூற்றுக்கணக்காண அறிவியல்,ஆன்மிக மற்றும் வாழ்வியல் கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!” , “வாவ் ! ஐந்தறிவு”, " எஸ் பாஸ்" “சித்தர்களா! பித்தர்களா!!” முக்கியமானவை.  " என்னை நான் சந்திததேன்" என்ற தலைப்பில் தன் வாழ்க்கையில் நடந்த  நிகழ்வுகளை சுவராஸ்யமான நடையில் எழுதியுள்ளார்.இது சுயமுன்னேற்ற நூலாகவும் பார்க்கப்பட்டு பாராட்டப்படுகிறது.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தன் தந்தை செய்த கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர், அதை கவனித்தபடியே கதைகள் எழுதினார்.இவரின் முதல் சிறுகதை 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. நாவலின் தலைப்பு வாடகைக்கு ஓர் உயிர். 

அதே 1980வது வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப் என்ற முதல் தொடர்கதை வெளியானது.1980லிருந்து 1995 வரை தமிழ்நாட்டில் 41 மாத நாவல்கள் வெளிவந்தன. அனைத்திலும் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதியதின் விளைவு 1998ம் ஆண்டே 1000மாவது நாவலைத் தொட்டுவிட்டார்.

இவரது எழுத்து படிக்க எளிமையாகவும், படித்தவுடனேயே புரிந்து கொள்ளும்படியாக இருப்பதால் பாமர வாசகர்களும் படிக்கிறார்கள். அதேபோல் பல்துறை வல்லுனர்களும் படிக்கிறார்கள் வாசிக்கிறார்கள்.சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும்,நாவல்களும் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இவருடைய நாவல்களை பல பல்கலைக்கழக மாணவர்கள் பி.ஹெச்டி படிப்பில் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு டாக்டர் பட்டம் பெற்று இருப்பது சிறப்பு.இவருடைய நாவல்கள் பல திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புக்கள் அச்சுப்புத்தகங்களாக மட்டுமின்றி மின்புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கின்றன. 

எழுத்துலகில் இவர் ஆற்றிய சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது

Read More...

Achievements

+8 more
View All