Share this book with your friends

Vedhaagama Manappaada Vasanangal Baagam 2 / வேதாகம மனப்பாட வசனங்கள் பாகம் 2

Author Name: Yesudas Solomon | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

தேவனுடைய உன்னத நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். இந்த புத்தகத்தை உங்களுக்கு கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். தேவனுடைய வார்த்தைகளாகிய வேத வசனங்களை உங்கள் பிள்ளைகள் மனப்பாடம் செய்ய நீங்கள் எடுத்திருக்கும் முயற்சியும், உங்களின் மேலான எண்ணமும் நிறைவேற தேவன் சகல வகையிலும் உதவி செய்வாராக.

தேவனுடைய வார்த்தைகளை நம்முடைய இருதயத்தில் பதிய வைக்கும் போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள் ஏராளம் ஏராளம். அந்த வார்த்தைகளை இரவும் பகலும் தியானித்துக்-கொண்டிருக்கும் போது இன்னும் அதிகமாய் ஆசீர்வதிக்கப்படுகிறோம். தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள மிகவும் சிறந்த வழி இதுவே. இந்த ஜீவனுள்ள வார்த்தையானது சத்துருவின் நாச மோசங்களினின்றும், பிசாசின் வஞ்சகத்தினின்றும் நம்மை எச்சரித்து நடத்தவும் பாதுக்காக்கவும் செய்யும்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ஏசுதாஸ் சாலொமோன்

ஏசுதாஸ் சாலொமோன் பல ஆண்டுகளாக தேவனுடைய வார்த்தை குழுவின் தலைவராக இருந்து இந்தியாவில் முதன் முதலாக அநேக விதமான மீடியா ஊழியங்களில் அநேகரை பயிற்றுவித்து வந்தவர். இந்திய மொழி வேதாகமங்களை யூனிகோட் வடிவில் மாற்றி மக்களுக்கு இலவசமாக தந்தவர். ஆதிவாசி மக்கள் மத்தியிலும் மீடியாவை பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர். ஏறக்குறைய 15,000 தமிழ் கிறிஸ்தவ பழங்கால புத்தகங்களை PDF வடிவில் இலவசமாக www.WordOfGod.in மற்றும் www.Archive.org என்னும் இணையதளங்களில் மின் பதிப்பாக வெளியிடுகிறார், இதில் அநேக பழைய தமிழ் வேதாகமங்களும், அகராதிகளும் அடங்கும்.

மூன்று பல்கலைகளங்களில் பட்டமும், பண்டிதர் பட்டமும் பெற்ற இவர், கிறிஸ்துவுக்காக அவைகளை குப்பை என்று எண்ணி கலைந்துவிட்டார். "பைபிள் மினிட்ஸ்" என்கிற பெயரில் கர்த்தருக்காக பகுதி நேர இறைப்பணி செய்து வருகிறார்.

இந்த புத்தகம் இவர் வெளியிடுகிற 29வது புத்தகமாகும்.

Read More...

Achievements

+5 more
View All