Share this book with your friends

KAAVALAN / காவலன் பாகம் - 3 PART - 3

Author Name: Gowri Muthukrishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

காவலன் பாகம் - 3 எனது 20 ஆம் நாவல். முன் இரு பாகங்களின் தொடர்ச்சி இந்த பாகம் அதில் கேள்வியாக நின்ற சில இடங்களும், இதையும் சொல்லி இருக்கலாம் என்று வாசகர்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் சேர்த்து, இறுதி பாகமாக தந்து இருக்கிறேன். கதை சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியது, அதுவே கதையின் மையக்கரு. மேலும், கதை சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களையும் செய்திகளையும்  உள்ளடக்கியது. 

Read More...
Paperback
Paperback 228

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம்

எனது பெயர் கௌரி முத்துகிருஷ்ணன். படித்தது இளங்கலை அறிவியல். வேலை கிராஃபிக் விஷுவலைசராக, வேலை போக மீத நேரம் என் பொழுதை போக்குவது வாசிப்புடன் தான். அப்படி வாசிக்க பிரதிலிபி என்னும் செயலியின் உள்ளே சென்று, ஹைக்கூ என சில வரிகள் கவிதையென எழுதி, அது என்னை கதை எழுத தூண்ட, என் முதல் கதையை 2019 ஆம் ஆண்டு பிரதிலிபி செயலி நடத்திய " காதலே காதலே " போட்டியில் என் முதல் கதையான "கவிதையே சொல்லடி" என்னும் கதையை சமர்பித்து, என் எழுத்தை தொடங்கினேன். என் கதைகள் அத்தனையும் அன்பையும் புரிதலையும் கருவாக கொண்டது. என்னை சுற்றியிருக்கும் மனிதர்கள் செய்த சரிகளையும் தவறுகளையும்,  என் புனைவு சேர்த்து கதையாக மாற்றி அதில் அன்பிற்கும் புரிதலுக்கும் உள்ள அவசியத்தை சொல்வதே என் கதையின் நோக்கம். காதல், உறவு, குடும்பம், சஸ்பென்ஸ், திரில்லர், உளவியல் ரீதியான சிக்கல் அதன் தீர்வு என என் கதைகள் இருக்கும். இதுவரை 21 நாவல், 4 குறுநாவல், 13 சிறுகதை எழுதி உள்ளேன்.  நன்றி.

அன்பு அனைத்தும் செய்யும்.
நட்புடன்,
கௌரி முத்துகிருஷ்ணன்.

Read More...

Achievements