Share this book with your friends

Theerpu Thedi Varum / தீர்ப்பு தேடி வரும்

Author Name: Pattukotai Prabakar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பிரபல திரைப்பட நடிகர் நிர்மல்குமாரும் நடிகை பரணியும் தொடர்ந்து பல படங்களில் இணைந்து நடிக்கின்றனர். அப்படி நடிக்கும் படங்கள் மிகப் பெரிய வெற்றியும் பெருகின்றன. இதனால், இருவருக்கும் காதல் என ஊடகங்களில் செய்திகள் வரத் தொடங்குகின்றன. இது நிர்மல்குமாரின் மனைவி திவ்யாவுக்குத் தெரியவர பெரும் அதிர்ச்சியாகிறாள். இதற்கிடையே, நடிகர் நிர்மல்குமாரைத் தீர்த்துக்கட்ட சம்பத் என்பவன் திட்டம் போட்டு சென்னைக்கு வருகிறான். அந்த நேரத்தில், தன் மனைவி திவ்யாவை அழைத்துக்கொண்டு நிர்மல் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறான். அங்கும் அவனைத் தேடி வருகிறான் சம்பத். இந்தச் சூழ்நிலையில் நடிகர் நிர்மல்குமாரின் மனைவி ஊட்டியில் உள்ள விடுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். அது தொடர்பான விசாரணை தொடங்கி, பின் அந்தக் கொலையின் பின்னணி என்ன என்பதை நோக்கி இக்கதை நகர்கிறது.

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பட்டுக்கோட்டை பிரபாகர்

பட்டுக்கோட்டை பிரபாகர் இதுவரை 300-க்கும் மேற்பட்ட நாவல்களும், 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரபல வார இதழ்களான ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘குங்குமம்’, ‘கல்கி’, ‘ராணி’ போன்றவற்றில் 90-க்கும் மேற்பட்ட தொடர்களை எழுதியிருக்கிறார். இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்ததோடு, அவருடைய ‘அவசர போலீஸ் 100’, ‘பவுனு பவுனுதான்’ திரைக்கதைகளில் பங்களித்திருக்கிறார். ‘சாமுராய்’, ‘பகவதி’, ‘நேபாளி’, ‘நான் அவன் இல்லை’, ‘ஜெயம்கொண்டான்’, ‘மாஞ்சா வேலு’, ‘கண்டேன் காதலை’, ‘காக்கி சட்டை’, ‘இமைக்கா நொடிகள்’, ‘காப்பான்’ உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் வசனகர்த்தா. 150–க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல பதிப்பகங்கள் மூலம் இவரின் புத்தகங்கள் பல பதிப்புகள் காண்கின்றன.

Read More...

Achievements

+4 more
View All