You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇந்த நாவல் சற்றே வயதான , மிகவும் வசதியான ஒரு அன்பு தம்பதியின் வாழ்க்கையில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களை கொண்டது. குழந்தை இல்லாத அந்த தம்பதியின் வாழ்க்கையில் ஒரு இளம்பெண் நுழைய - தான் அந்த ஆணின் கருவை வயிற்றில் சுமப்பதாக அந்தப் பெண் சொல்ல , சந்தர்ப்பங்களும் அவளுக்கு சாதகமாக அமைய - வாரிசு வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் அந்த ஆணின் நிலைமை - அதே சமயத்தில், 'ஒரு நாளும் உங்களை விட்டு போகவே மாட்டேன்' என்ற நிலையில் இருக்கும் அந்த அன்பு மனைவி - என்ன நடக்கப்போகிறது.... விறுவிறுப்பான அந்த கிளைமேக்ஸ் அதற்கு விடையை சொல்லும்...!
ஸ்ரீவித்யா தேசிகன்
பல பிரபலமான தமிழ் பத்திரிகைகளில் ஒரு பத்திரிகையாளராக பல நூறு கட்டுரைகள், பேட்டிகள், சிறுகதைகள் எழுதியுள்ளார் இந்த நாவலின் ஆசிரியரான ஸ்ரீவித்யா தேசிகன். தினமலர் வாரமலரில் பிரபலமான பின்னணி பாடகியான திருமதி வாணி ஜெயராம் அவர்களின் இசைப் பயணம் தொடரை எழுதியுள்ளார் அவர். 10 வாரங்கள் வந்த இந்த தொடருக்கு வாசகர்கள் அத்தனை வரவேற்பு கொடுக்க , தினமலரே தங்களுடைய தாமரை பிரதர்ஸ் பதிப்பகத்தின் மூலம் , வாணி ஜெயராமின் இசைப்பயணம் 'நாதமெனும் கோவிலிலே'என்று அதை புத்தகமாக வெளியிட்டுள்ளனர். பேட்டிகளை எழுதும்போதே எதிரே அந்த நபர் உட்கார்ந்துகொண்டு நம்முடன் பேசுவது போல எழுதக்கூடியவர் ஸ்ரீவித்யா தேசிகன் அப்படியிருக்க , அவர் எழுதும் முதல் நாவலான 'வைதேகி காத்திருந்தாளோ...!' என்ற இந்த நாவல் எத்தனை சுவாரசியமாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ...! இந்த நாவலை படிப்பவர்களை இதில் வரும் கதாபாத்திரங்கள் உடனேயே வாழ வைத்து விடுகிறார் இந்த எழுத்தாளர்... படித்து முடித்து சில மணிநேரங்கள் ஆகிறது நமக்கு அதில் இருந்து வெளிவருவதற்கு... மிஸ் பண்ணாமல் கட்டாயம் நாவலைப் படித்துப் பாருங்கள்...!
The items in your Cart will be deleted, click ok to proceed.