மனிதன் தன்னுடைய விருப்பு வெறுப்புகளைப் பிறரிடம் தெரிவிக்க முற்பட்டபோது, மொழி பற்றிய சிந்தனையும் கல்வி பற்றிய சிந்தனையும் தோன்றின.
'மனிதருக்குள் மறைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிக்கொணருவதே கல்வி என்றார்' சுவாமி விவேகானந்தர்.
ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளி களில் பயிலும் மாணவர் தாமே உயர்ந்தவர் என்று கருதித் தனிச் சாதியாக வளர்கின்றனர். நம் நாட்டில் நன்கு பயின்று சிறக்கப் பட்டம் பெறுபவர் நம் நாட்டில் தங்காது பிற நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றார்களே என்று பெருந்தலைவர்கள் உள்படப் பலர் வருந்துகின்றனர்
தாய்மொழியிலேயே கல்வி அமையவேண்டும் என்று விடுதலைக்கு முன்பே மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் எல்லாப் பாடங்களுக்கும் நல்ல தமிழ்ச்சொற்களைக் கண்டு தனித்தனி (ஒவ்வொரு பாடத்திற்கும்) அகராதி நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழில் எழுதுவோர்க்கு ஊக்கம் அளித்தார் இராஜாஜி. அதற்குப் பிறகும் ஒருமுறை இந்த வகையில் எல்லாப் பாடங் களுக்கும் தனித்தனி அகராதிகள் வந்தன.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners