அரசாங்கத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல், நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும், சிறந்த புரிதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்து மாணவ, மாணவிகளிடம் நற்பண்புகளை வளர்க்கும் விழுக் கல்வியை கற்பிக்க முயற்சித்தால், சமுதாயத்தில் மாற்றத்தை நிச்சயம் உருவாக்க முடியும்.
கல்வி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதோடு, நேரத்தின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது. குழந்தையாக கற்க ஆரம்பித்து , தன் வாழ்நாள் முடியும் வரை கல்வியை கற்றுக்கொண்டே இருக்க முடியும், அதற்கு எல்லை ஏதுமில்லை. கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது மற்றும் உயர் பதவிகளிலும் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது.
கல்வி என்பது பள்ளிக்கு செல்வது பட்டம் பெறுவது மட்டும் அல்ல ,உங்கள் அறிவை வளர்ப்பது ,வாழ்வின் உண்மைகளை அறிந்துகழ்வதுமே ஆகும் என்று புகழ் பெற்ற அறிஞர் சகுந்தலா தேவி குறிப்பிடுகிறார்
கல்வி கற்ற ஒருவரால் மட்டுமே மூட பழக்க வழக்கங்களில் இருந்த விடுபடவும் ,கல்வி அறிவு கொண்டு வாழ்வில் முன்னேறவும் முடியும்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners