பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும். பொய்யினைப் போலவே பொறாமையும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டுள்ளது.
நம்மிடம் இல்லாதவை மற்றவர்களிடம் இருப்பதைப் பார்க்கும்பொழுது எந்நிலையிலும் அவர்கள் மீது பொறாமை கொள்ளாமல், அவர்களாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைப்பதுடன், அவர்களின் நல்வாழ்வுக்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை புரிய வேண்டும்.