You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palவாடாவஞ்சி தலைமலைந்து
கூடார்மண் கொளல்குறித்தன்று. - கொளு
வாடாத பொன்மலர் வஞ்சி சூடிக்கொண்டு
இணக்கம் இல்லாதவர் மண்ணைக் கொள்ளக் கருதியது
செங்கண் மழவிடையிற் றண்டிச் சிலைமறவர்
வெங்கண் மகிழ்ந்து விழவமர – அங்குழைய
வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக்
குஞ்சி மலைந்தானெங் கோ.
சினம் கொண்ட காளை போல்
சிலைமறவர் விழாக் கொண்டாட
வணங்காரை வணக்க
மன்னன் வஞ்சி மலர் சூடினான்
வஞ்சியரவம்
வள்வார் முரசமொடு வயக்களிறு முழங்க
ஒள்வாட் டானை யுருத்தெழுந் தன்று.
முரசும் களிறும் முழங்க வாள் மறவர் போருக்கு எழுதல்
பௌவம் பணைமுழங்கப் பற்றார்மண் பாழாக
வௌவிய வஞ்சி வலம்புனையச் – செவ்வேல்
ஒளிறும் படைநடுவ ணூழித்தீ யன்ன
களிறுங் களித்ததிருங் கார்.
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.ஐயனாரிதனார்
ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலின் ஆசிரியர் ஆவார். இவர் சேர மன்னர்களின் மரபில் தோன்றியவர். இவர் சேர மரபினராயினும் தமது நூலைத் தமிழ் வேந்தர் மூவர்க்கும் பொதுவாகவே செய்துள்ளார். ஐயனாரிதன் என்பதற்கு ஐயங்கள் தீர்க்கும் ஆசிரியர் எனப்பொருள்படும். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவராயினும் திருமாலையும் உயர்வாகப் பாடியுள்ளார். தமிழ் நூல்களில் சிறந்த அறிவு படைத்தவர். தொல்காப்பியர் முதலிய பன்னிருவரால் செய்யப்பட்டது எனப்படும் பன்னிரு படலத்தை நன்கு உணர்ந்தவர்.
இவர் அரச மரபினராதலின் புறத்திணை ஒழுக்கத்தில் நன்கு ஈடுபாடு உடையவராய் அதனை நன்கு ஆய்ந்து உலக மக்கட்கு அவை விளங்கும் வண்ணம் வெண்பாவால் எடுத்துக்காட்டினைத் தந்து 'வெண்பாவின் வரிசை' எனும் பொருள் தரும்படியான புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலினை இயற்றினார். இவரது வெண்பாக்களின் மூலம் 'இவர் சகுனத்தில் நம்பிக்கை உடையவர்; தெய்வப்பற்றுள்ளவர்; சிறந்த மறப்பண்பு உள்ளவர்; சிறந்த உவமைகளைக் கையாளுபவர்; அறநெறிகள் அறிந்தவர்' எனபவற்றை அறியலாம். இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.