Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
நான் வெண்பா மாலையில் குறிப்பிட்டதைப் போல ஆக்கியழித்தாரையுமே பேணி மறைத்தருளும் ஐந்தொழிலானை அம்பிகையை வணங்கும்போதும் அவனுறையும் மாமலையை கண்ணுற்று தொழுதேத்தும் போதும் ஏ
நான் வெண்பா மாலையில் குறிப்பிட்டதைப் போல ஆக்கியழித்தாரையுமே பேணி மறைத்தருளும் ஐந்தொழிலானை அம்பிகையை வணங்கும்போதும் அவனுறையும் மாமலையை கண்ணுற்று தொழுதேத்தும் போதும் ஏதுமற்ற ஏழையேனுக்கு பாப்புனையும் நுண்மாண் நுழைபுலம் தந்தருளிய ஆறெண்ணி சீரெண்ணி அவன் மீதும், மாமலை, திருவிழா உற்சவங்கள், ஆலயம், மூர்த்திகள் அதன் கீர்த்திகள் இத்யாதிகளை நன்தமிழில் அதுவும் வெண்தமிழில் வெண்பாக்களாக புனைய வேண்டும் என்று அவனருளிய அவா உந்த அருணையீசன் பற்றி தல, மூர்த்தி வரலாறு உள்ளிட்ட நூல்களை வாங்கிப் படித்து உள்வாங்கி ஏதோ அவனருளிய என் சிற்றறிவுக்கு எட்டியவாறு அந்த வெள்ளையான் ஏறும் விமலனைப் பாடியுள்ளேன். மூர்த்திகள், பிரகாரங்கள், கோபுரங்கள் அட்டலிங்க அனுட்டானங்களை என் சிற்றறிவுக்கு விளங்கிய வரை விளக்கியுள்ளேன். நிறையிருப்பின் வாழ்த்துக குறையிருப்பின் மன்னிக்க.
என்றும் நன்றியுடன்
அன்பன்
கவிஞர் இர, அரங்கநாதன்
நான் வெண்பா மாலையில் குறிப்பிட்டதைப் போல ஆக்கியழித்தாரையுமே பேணி மறைத்தருளும் ஐந்தொழிலானை அம்பிகையை வணங்கும்போதும் அவனுறையும் மாமலையை கண்ணுற்று தொழுதேத்தும் போதும் ஏ
நான் வெண்பா மாலையில் குறிப்பிட்டதைப் போல ஆக்கியழித்தாரையுமே பேணி மறைத்தருளும் ஐந்தொழிலானை அம்பிகையை வணங்கும்போதும் அவனுறையும் மாமலையை கண்ணுற்று தொழுதேத்தும் போதும் ஏதுமற்ற ஏழையேனுக்கு பாப்புனையும் நுண்மாண் நுழைபுலம் தந்தருளிய ஆறெண்ணி சீரெண்ணி அவன் மீதும், மாமலை, திருவிழா உற்சவங்கள், ஆலயம், மூர்த்திகள் அதன் கீர்த்திகள் இத்யாதிகளை நன்தமிழில் அதுவும் வெண்தமிழில் வெண்பாக்களாக புனைய வேண்டும் என்று அவனருளிய அவா உந்த அருணையீசன் பற்றி தல, மூர்த்தி வரலாறு உள்ளிட்ட நூல்களை வாங்கிப் படித்து உள்வாங்கி ஏதோ அவனருளிய என் சிற்றறிவுக்கு எட்டியவாறு அந்த வெள்ளையான் ஏறும் விமலனைப் பாடியுள்ளேன். மூர்த்திகள், பிரகாரங்கள், கோபுரங்கள் அட்டலிங்க அனுட்டானங்களை என் சிற்றறிவுக்கு விளங்கிய வரை விளக்கியுள்ளேன். நிறையிருப்பின் வாழ்த்துக குறையிருப்பின் மன்னிக்க.
என்றும் நன்றியுடன்
அன்பன்
கவிஞர் இர, அரங்கநாதன்
இந்த வரிகள் என் இதயத்தின் உணர்வுகள் ஏற்படுத்திய இன்ப வலிகளின் வடுக்கள். அந்த வடுக்களினுள் நீறுபூத்த நெருப்பாய் கிடந்ததை தன் பேரழகு விசிறியால் வீசி ஊழித் தியாக்கி உலவி
இந்த வரிகள் என் இதயத்தின் உணர்வுகள் ஏற்படுத்திய இன்ப வலிகளின் வடுக்கள். அந்த வடுக்களினுள் நீறுபூத்த நெருப்பாய் கிடந்ததை தன் பேரழகு விசிறியால் வீசி ஊழித் தியாக்கி உலவிட்டவள் ஒரு பேரழகு தேவதை. அவளை மட்டும் நான் கண்ணுறாதிருந்தால் இத்தனை வீச்சுக்களோடு. என் கனவுக்கன்னி கவிதைச் சலங்கையிட்டு விண்ணுலகம் வரை விரவி நடனமாடியிருக்க மாட்டாள். அவளை சில முறை மட்டுமே நான் கண்டேனாயினும், அழியா ஓவியமாய் அலங்கார நர்த்தகியாய் என் இதய மாளிகையில் எக்கணமும் நடமிட்டுக் கொண்டே இருக்கிறாள். அந்நடனம் என் எப்பிறப்பிலும் தொடரும் தொடர வைப்பேன். அவளை நான் உயிர்ப்போடு இதயத்தில் இருந்து கரங்களில் இறக்கி எழுதுகோலின் வழியே உலவ விட்ட உன்னதம் தான் இந்த புத்தகத்தின் கவிதை வரிகள்.
அவள் உயிரியல் ரீதியாக யாருக்கும் சொந்தமாயிருக்கலாம். ஆனால் கனவு நாயகியாக என் கற்பனைக்கே சொந்தம். அவளுக்கு நான் நன்றிகள் நவில மாட்டேன். ஏனெனில் என் கனவுகளோடு கலந்து எனக்குள்ளான இனியவளுக்கு நான் எப்படி நன்றி சொல்ல.....
இருப்பினும் இல்லாத நன்றிகளை சொல்லாமல் சொல்கிறேன்.
இந்த வரிகள் என் இதயத்தின் உணர்வுகள் ஏற்படுத்திய இன்ப வலிகளின் வடுக்கள். அந்த வடுக்களினுள் நீறுபூத்த நெருப்பாய் கிடந்ததை தன் பேரழகு விசிறியால் வீசி ஊழித் தியாக்கி உலவி
இந்த வரிகள் என் இதயத்தின் உணர்வுகள் ஏற்படுத்திய இன்ப வலிகளின் வடுக்கள். அந்த வடுக்களினுள் நீறுபூத்த நெருப்பாய் கிடந்ததை தன் பேரழகு விசிறியால் வீசி ஊழித் தியாக்கி உலவிட்டவள் ஒரு பேரழகு தேவதை. அவளை மட்டும் நான் கண்ணுறாதிருந்தால் இத்தனை வீச்சுக்களோடு. என் கனவுக்கன்னி கவிதைச் சலங்கையிட்டு விண்ணுலகம் வரை விரவி நடனமாடியிருக்க மாட்டாள். அவளை சில முறை மட்டுமே நான் கண்டேனாயினும், அழியா ஓவியமாய் அலங்கார நர்த்தகியாய் என் இதய மாளிகையில் எக்கணமும் நடமிட்டுக் கொண்டே இருக்கிறாள். அந்நடனம் என் எப்பிறப்பிலும் தொடரும் தொடர வைப்பேன். அவளை நான் உயிர்ப்போடு இதயத்தில் இருந்து கரங்களில் இறக்கி எழுதுகோலின் வழியே உலவ விட்ட உன்னதம் தான் இந்த புத்தகத்தின் கவிதை வரிகள்.
அவள் உயிரியல் ரீதியாக யாருக்கும் சொந்தமாயிருக்கலாம். ஆனால் கனவு நாயகியாக என் கற்பனைக்கே சொந்தம். அவளுக்கு நான் நன்றிகள் நவில மாட்டேன். ஏனெனில் என் கனவுகளோடு கலந்து எனக்குள்ளான இனியவளுக்கு நான் எப்படி நன்றி சொல்ல.....
இருப்பினும் இல்லாத நன்றிகளை சொல்லாமல் சொல்கிறேன்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.