Share this book with your friends

1964 / 1964

Author Name: Sudharsan Gopal | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

1960களில் மெட்ராஸ் மாகாணத்தில் இருக்கும் பல ஜமீந்தார்களின் வீடுகளில் தொடர்ச்சியாக கொள்ளை நடக்கிறது, இதனால் ஒட்டுமொத்த ஜமீன் குடும்பங்களும் அதிர்ந்து போய் இருக்கின்றனர். அந்த கொள்ளையனை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர், ஆனால் எதுவும் எடுபடவில்லை. இறுதியாக இந்த பொறுப்பு கர்ணன் எனும் ஒரு துப்பறிவாளனிடம் ஒப்படைக்கப் படுகிறது. இந்த இளம் துப்பறிவாளன் தனது குழுவினருடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளிலும் தேடலிலும் ஈடுபடுகிறான். இந்த தேடலில் அவன் பல்வேறு திருப்பங்களையும், மர்மங்களையும் சந்திக்கிறான். 

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சுதர்சன் கோபால்

சுதர்சன் கோபால், மதுரையில் பிறந்து பொறியியலில் இளநிலை பட்டம் பெற்றவர். தனது பள்ளிப்பருவத்திலிருந்தே சிறுகதைகள் படிக்கும் ஆர்வம் அவரிடம் இருந்தது. கதைகள் மேல் அவர் கொண்டிருந்த ஆர்வத்தை அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது தனித்துவமான கதை சொல்லும் திறமையின் வாயிலாக அதிகப்படுத்தினார். அவரது கதை சொல்லும் கலையில் ஈர்க்கப்பட்ட சுதர்சன் தானும் அக்கலையை கற்றிட வேண்டுமென நினைத்தார். சாதாரண விசயத்தை கூட மிகவும் சுவாரசியமாக சொல்லும்போது தான் கேட்பவர்கள் அதனை முழு கவனத்தோடும், ஆர்வத்தோடும் கேட்பார்கள். 

தன் வாழ்வில் காணும், கேட்கும் சிறு சிறு சம்பவங்களை எல்லாம் தன்னுடைய சொந்த கற்பனைகளை புகுத்தி சுவாரசியமான சிறுகதைகளாக மாற்றும் கலையை அவர் கற்றுக்கொண்டார். தினசரி தனது வாழ்வில் காணும் மனிதர்களும், சம்பவங்களுமே பின்னாளில் கதைகளாக மாறியது.

Read More...

Achievements