Share this book with your friends

Kasappu Thandha Inippu / கசப்பு தந்த இனிப்பு சிறுகதைத்தொகுப்பு.

Author Name: Imalayen | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கசப்பு தந்த இனிப்பு என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பில் பல்வேறு அறம் சார்ந்த கருத்துக்களை ஆழமாக பதிய வைக்கும் நோக்கத்துடன் கதைகள் புனையப்பட்டு உண்மை கதைகளை இணைத்து சில உண்மை சம்பவங்களை கூட பிணைத்து எழுதப்பட்டுள்ளது. இந்தக் கதைகள் மொத்தமும் நான்கு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்டது. பெற்றோர் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது. பிள்ளைகள் பெற்றோரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது. பயணம் போகும் பொழுது நம் திட்டமிடுதல் எவ்வாறு அமைய வேண்டும் என்பது. குழுவாக இணைந்து நாம் ஒரு காரியத்தை குறித்தோ அல்லது ஒரு லட்சியத்தை குறித்தோ பயணிக்கும் பொழுது நாம் நம் லட்சிய பயணத்தில் எப்படி அடிபிறழாமல் செயலாற்ற வேண்டும் என்பது குறித்த பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய தொகுப்பாக இந்த சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்படுகிறது. இதற்கு உங்களுடைய மேலான ஆதரவை தந்து படித்து பயனுற வேண்டிக்கொள்கிறேன்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இமாலயன்

இமாலயன் என்னும் புனை பெயருடன் சென்னையில் வாழும் எனது இயற்பெயர் எனது பெற்றோர் வைத்த பெயர் அந்தோணி குமார். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் படித்தவன். சென்னையில் என் பெற்றோருடன் என் அன்பான காதல் மனைவியுடன் என் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய ஆரம்பக்கல்வியை ஸ்டெல்லா மேல்நிலைப் பள்ளி பிரசெண்டேஷன் கான்வென்டில் படித்தேன் அங்கு என்னை பெருமளவு ஊக்குவித்த மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் திருமதி உஷாராணி எனது முதல் தமிழ் ஆசிரியை இரண்டாவதாக திருமதி பத்மாவதி எனது வேதியியல் மற்றும் அறிவியல் ஆசிரியை இவர்கள் ஊற்றிய அறிவு தீயின் ஆரம்பத்தில்  வளர தொடங்கினேன். என்னுடைய பள்ளி இறுதி வகுப்பு களை சென்னையில் உள்ள தூய தோமா மேல்நிலைப்பள்ளியில் படித்தேன் அங்கு என்னை பெருமளவு ஊக்குவித்த ஆசிரியர்கள் ஆசிரியர் தென்றல் மதிப்பிற்குரிய திரு அல்பிரட் தேவனேசன் அவர்கள் எனது தமிழ் ஆசான், மரியாதைக்குரிய ஆசிரியர் திரு ஜான் ரத்தினராஜ் எனது வணிகவியல் ஆசிரியர், என்னது விலங்கியல் படிப்பை பொருளியல் பாடத்தில் புகழ்பெற்ற சென்னை இலயோலா கல்லூரியில் படித்தேன், என்னை பெருமளவு ஊக்குவித்த கல்லூரி முதல்வர் பாதிரியார்கள் அனைவருக்கும் என் நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். டி படத்தக்க வகையில் இன்றைக்கு அடைந்த உயரங்களில் பெரும் பங்காற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர் பேராசிரியர் முனைவர் திரு அமல்ராஜ் அவர்கள் தமிழ்த்துறை பேராசிரியர், பெறுவதும் ஊக்கப்படுத்திய பேராசிரியர் முனைவர் திரு யூஜின் அவர்கள் பொருளியல் துறை. என்னுடன் பணியாற்றிய ஆசிரியர் திரு கண்ணன் அவர்கள் மற்றும் வழக்கறிஞர் காளிதாசன் அவர்கள் இருவரும் எனது நலம் விரும்பிகள். ஏற்கனவே ஏழு புத்தகங்களை எழுதியுள்ளேன் நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். எனது வாழ்வின் கடைசி மூச்சு இருக்கும் வரை எழுத்துப் பணியை கைவிடாமல் எழுதிக்கொண்டே இருப்பேன். இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரையும் நான் அதிகமாக நேசிக்கிறேன் ஆனால் என் தமிழ் சமூகத்து மக்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன். இறுதியிலும் உறுதியாக எல்லாம் வல்ல இறைவன் எனக்கு தந்த இந்த ஞானத்திற்கான என்னை வடிவமைப்பதற்கு அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Read More...

Achievements

+3 more
View All