Share this book with your friends

kaviyin viyarvai / கவியின் வியர்வை கவிதை தொகுப்பு

Author Name: K Arimurugan | Format: Paperback | Genre : Poetry | Other Details

கவியின் வியர்வை என்னும் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பில், சமூக சிந்தனைகளை தூண்டும் அடிப்படையில் பல கருத்துக்களை உள்ளடக்கிய கவிதைகளை படைத்து அளிக்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் என்னை பாதித்த என் கண்கள் படம் பிடித்துக் கொண்ட நிகழ்வுகளை நான் என் பேனாவின் வியர்வையாக காகிதத்தில் படித்திருக்கிறேன் அதனையே கவியின் வியர்வை என்று தலைப்பிட்டு உங்களுக்கு படைத்து அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயம் ஒவ்வொரு கவிதைகளும் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தரும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு கவிதைகளையும் நீங்கள் கடந்து போகும் பொழுது உங்களுக்கு காட்சிகளோடு கூடிய ஒரு பயணத்தை நிச்சயம் உங்களுக்கு வெளிப்படுத்தும். கொடைக்கானல் மலையில் தொடங்கிய என்னுடைய பயணமானது சென்னை லயோலா கல்லூரியில் வந்தடைந்த பொழுது பல கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு வகுப்புகளை தொடங்கினேன். என் கல்லூரி எனக்கு பல அனுபவங்களை கற்று தந்ததோடு மட்டுமல்லாமல், என் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் என் கனவுகளை மெய்ப்பித்துக் கொள்ளவும் எனக்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறது அதனையும் இந்த கவிதைத் தொகுப்பில் நான் வெளிப்படுத்தி இருக்கிறேன். இப்படிக்கு உங்கள் கி . அரி முருகன்

Read More...
Paperback
Paperback 220

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கி. அரிமுருகன்

எனது பெயர் கி.அரி முருகன் எனது சொந்த ஊர் கொடைக்கானல் அருகேயுள்ள கூக்கால் இலயோலா கல்லூரியில் இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன் எனக்கு இந்த கவிதை எழுத தூண்டுதல் மற்றும் கவிதை எழுத எனக்கு பிடித்த தன் காரணம என் பள்ளி வகுப்பில் எனக்கு தமிழ் மீது பற்று ஏற்படக் காரணமாக இருந்த ரிச்சர்டு ஐயா அவர்கள் மற்றும் ஒரு சில ஆசிரியர்கள் பின்னர் கல்லூரி படிக்கும் பொழுது இந்த புத்தகத்தை இயற்ற எனக்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் முதலில் முனைவர் அமல்ராசு ஐயா அவர் எனக்கு இந்த புத்தகத்திற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்தார் அடுத்தது ஐயா திரு இமாலயன் இந்த புத்தகத்திற்காக என்னைத் தூண்டியது மட்டுமின்றி நாள்தோறும் என்னை ஊக்கப்படுத்தி எனக்கு கவிதைக்கான இலக்கிய இலக்கணம் கற்றுக் கொடுத்து கவிதை எழுதும் முறையையும் கற்றுக் கொடுத்து என்னை இந்த கவிதையை இயற்ற வைத்துள்ளார் இந்த கவிதையை நான் பல தலைப்புகளில் பன்முகத் தன்மையோடு பல கருத்துக்களை கூறியிருப்பேன் இதற்கு முழு காரணம் ஐயாதான் இந்தக் கவிதைத் தொகுப்பை நான் எழுத ஆரம்பிக்கும் பொழுது சற்று கடினமாக இருந்தது பின் கவிதை எழுத எழுத அது கைவசம் வர ஒரு சில இடங்களில் இலக்கண இலக்கியம் சற்று குறைவாக இருந்தாலும் இப்போது இருக்கின்ற இளைஞர்கள் படிக்கும் அளவிற்கு இருக்கும் நான் கவிதைகளை ஒவ்வொரு முறையும் எழுதி பின் அதை திருத்தி மறுபடியும் அதை ஒருமுறை வாசித்துப் பார்ப்பேன் ஒருமுறைக்கு பலமுறை அதை வாசித்துப் பார்த்து சரியாக உள்ளதா என அந்த கவிதைகளை நான் தொகுப்பில் சேர்த்து பின் அதே போல் அனைத்து கவிதைகளையும் நேரம் கருதாமல் பக்குவமான முறையில் அதை சரியாக இயற்றினேன் பின் கவிதைகளுக்காக வார்த்தை தேடுவதிலும் கவிதைக்கான எதுகை மோனை சந்தம் போன்றவை அமைப்பதும்  கடினமான இருந்தது கடின உழைப்போடு நான் இந்த கவிதை என்  முதல் கவிதை அதுமட்டுமின்றி இந்த கவிதையானது நான் இயற்றுவதற்கு மிகவும் சவாலானதாக இருந்தது புத்தகங்கள் படித்தும் பல இயற்கை காட்சிகளையும் ஒரு சில பயணங்களையும் ஒரு சில நிகழ்வுகளையும் வைத்து அதை புரிந்து கொண்டு அதில் மூழ்கி பின் இந்த கவிதைகளை அனைத்தையும் இயற்ற ஆரம்பித்தேன் என் கருத்துக்களும் நான் சொல்ல வந்த செய்திகளும் அனைத்தும் மாறாமல் கவியின் வியர்வை எனும் இந்த கவிதைத் தொகுப்பில் கூறியிருப்பேன் கவிதையின் அழகு மிகாமலும் கவிதையின் நடைக்கு ஏற்றார்போல் கவிதைக்கு ஏற்ற இறக்கத்தோடு சற்று இலக்கணம் குறைவாக இருந்தாலும் இப்போது உள்ள அனைவருக்கும் நன்றாக விளங்கும்படி இந்த கவிதைகளை அன்னையை தெரிவிக்கிறேன் இந்தக் கவிதைகளில் என்னுடைய முழு முயற்சியையும் உள்ளீடு செய்து இருக்கிறேன் இது எனது முதல் கவிதை தொகுப்பு என்று கூறி உரையை நிறைவு செய்கிறேன்

Read More...

Achievements

+3 more
View All