மலர்கள் என்பது செடி, மரம், கொடி ஆகிய தாவர வகையின் ஒரு உறுப்பாகும். மலரை பூ என்றும் நறுவீ என்றும் அழைப்பார்கள். இவை ஒவ்வொரு தாவரத்திலும் பல்வேறு வண்ணங்களில் இருக்கும். இவற்றில் ஒரு சில மலர்களில் தேன் இருக்கும். அந்தத் தேனைக் குடிக்க வண்டுகள் வரும்.சில மலர்கள் நாற்றம் நறுமணம்) மிகுந்தவை. சில மலர்கள் இரவிலும் சில மலர்கள் பகல் பொழுதிலும் மலரும். இரவில் மலரும் மலர்கள் பெரும்பாலும் வெண்மை நிறம் உடையனவாகவும் மணம் மிகுந்தவையாகவும் இருக்கும். ஏனெனில் இரவில் வண்டுகளுக்கு தன் இருப்பிடத்தைக் காட்டவே அவை அவ்வாறு உள்ளன.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners