Share this book with your friends

Nee Thee Enn Uyiril / நீ தீ என் உயிரில்

Author Name: Dr. Imalayen | Format: Paperback | Genre : Poetry | Other Details

 நீ தீ என் உயிரில் இது ஒட்டுமொத்தமாக காதலைப் பற்றி எழுதப்பட்ட ஒரு காதல் சார்ந்த புத்தகம். காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பை வாசிக்கும் வாசகர்களுக்கு காதலின் ஆழத்தையும் காதலின் மகத்துவத்தையும் சொல்வதோடு மட்டுமல்லாமல் 90களில் காதலையும் 2000 ஆம் ஆண்டின் காதலையும் ஒப்பீடு செய்து உங்களுக்கு ஆக்கபூர்வமான வகையில் படைத்தளித்திருக்கிறேன். இதனை தவறான போக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆக்கபூர்வமான சிந்தனையில் இதனை எடுத்துக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன். ஒரு தெய்வீக உணர்வு வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி இவை இரண்டின் சமச்சீரான ஒன்றினைகளை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த புத்தகத்தை வாங்கும் எண்ணத்துடன் இதனைப் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். பூமி
 உள்ளவரை இந்த காதல் வாழும். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் வணக்கங்களும். புத்தகத்தை உருவாக்கவும் வடிவமைக்கவும் உதவியாக இருந்த என்னுடைய அனைத்து உதவியாளர்களுக்கும் என்னுடன் பயணித்த ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த மனிதர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். வணக்கம்! வாழ்த்துக்கள்!

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

Dr.இமாலயன்

வணக்கம் அன்பு உறவுகளே நான் எழுத்தாளர் டாக்டர் இமாலயன் சென்னை தமிழ்நாட்டில் இருந்து. அடிப்படையில் நான் ஒரு பள்ளி மாணவர்களுக்கான ஆசிரியர், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் ஆங்கிலம் பொருளியல் வணிகவியல் வரலாறு சமூகவியல் உளவியல் புவியியல் போன்ற பாடங்களை எடுக்கும் திறன் பெற்றவன். இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் வணிகவியல் சார்ந்த அனைத்து பாடங்கள் பொருளியல் மற்றும் மேலாண்மை சார்ந்த அனைத்து பாடங்களையும் என் கடந்த காலங்களில் எடுத்தும் நிகழ்காலத்தில் என் ஆசிரியர் பணியை மேற்கொண்டும் வருகிறேன். நான் என்னுடைய மேல்நிலைப் படிப்பை தூய துவமா மேல்நிலைப் பள்ளியில் முடித்து, என்னுடைய இளங்கலை பொருளியல் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் நிறைவு செய்தேன். முதுகலை பொருளியல் படிப்பை சிக்கிம் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியின் வாயிலாக படித்து முடித்தேன். தமிழ் இலக்கியவியல் படிப்பில் இளங்கலை புலவியல் படிப்பை முதல் தேர்ச்சியில் வெற்றிகரமாக முடித்தேன், இதனை கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தேன். பொருளியல் படிப்பில் தத்துவ பேரறிஞர்கான எம்ஃபில் பட்டத்தையும் பெற்றது உள்ளேன். முனைவர் பட்டத்திற்கான பிஹெச்டி ஆய்வை பொருளியல் பாடத்தில் நமது இந்திய தேசத்தில் மத்திய பிரதேசம் மாநிலம் எந்த ஊரில் அமைந்துள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறேன். எழுத வேண்டும் என்கிற ஆற்றல் நான் எப்பொழுது எழுதத் தொடங்கினேனோ அப்பொழுது இருந்து என்னைப் பற்றிக் கொண்டு இப்போது வரை என்னுடன் பயணித்து வருகின்றது. என்னை பாதித்த நிகழ்வுகளையும் நான் கற்றுக் கொண்ட அறிவையும் பிறருக்குத் தருவதில் பெரும் இயம்புதலை கொண்டவனாக நான் இருக்கிறேன். தமிழ் இலக்கணத்தை முறையே படித்தவன் என்கிற முறையில் தமிழ் மீது மாறாத பற்றும் தீராத காதலும் எப்போதும் கொண்டுள்ளேன். என்னுடைய எழுத்துக்களும் நான் உங்களுக்கு படைத்தளிக்கும் புத்தகங்களும் உங்கள் சிந்தனை வேர்களில் நீர் பாய்ச்சி உங்கள் அறிவில் வெளிச்சத்தை ஏற்றும் என்று நம்புகிறேன். என் படைப்பை பார்வையிட்டு படித்து பயன் பெற வந்திருக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றி வணக்கம்.

Read More...

Achievements

+3 more
View All