உலகத்துல நிறைய இறப்பு நடக்குது. அதுவும் கொலையும் கொள்ளையும். அதிலும் பெண்ணை சர்வ சாதாரணமாக தன் சில நொடி இன்பத்திற்காக கற்பழித்து கொலை செய்து வெட்டி வீசுவதெல்லாம் தற்போது காபி குடிப்பது போல நடக்கிறது.
பெண்ணை ஆற்று பள்ளத்திலும், பெட்டியில் வெட்டி பூட்டியும், எத்தனை விதமான கொடூரமாக உடலில் சித்ரவதை செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அழிப்பதும் புணரப்படுவதும் எல்லாம் ஆண்மகனின் செயலே அல்ல.
எல்லார் வீட்டிலும் அக்கா தங்கை இல்லாமல் இருக்கலாம். அன்னை என்பவள் இருக்கின்றாளே. தாய் இறந்து போனாலும் பெற்றவள் பெண் என்ற இங்கிதம் அளவிற்காவது யோசித்து நடக்கலாம்.
சற்று யோசித்து பெண்ணை பெண்ணாக மதிப்பளியுங்கள்.
இது ஜீவா மற்றும் இளங்கோவின் செயலுக்கு மட்டும் புனையப்பட்ட கதை. நதியாவின் செயலை நான் எதிலும் நியாயப்படுத்தலை. சில பெண்களும் காதலை ஒரு செட்டில்மெண்ட் தேடுதலாக பாவித்ததலும், பழைய காதல் மீண்டும் சந்திக்க நேர்ந்தாலும் ஒரு கோட்டின் எட்டி நிறுத்தி பழகுவதை விடுத்து மாறாக மனம் குரங்காக மாறியதன் விளைவும் இறப்பை சந்திக்கின்றாள்.
என்ன இங்கு தவறே செய்யாத சில பெண்களும் குழந்தைகளும் நம் (உலகத்தில்)நாட்டில் கற்பழிப்பில் கொலையில் பாதிக்கப்படுவது கண்ணீரை வரவழைக்கிறது.