Share this book with your friends

19 VAYATHU SORGAM - YAMUNAVIN 48 MANI NERAM / 19 வயது சொர்க்கம் - யமுனாவின் 48 மணி நேரம் இரண்டு நாவல்கள்/2 Novels

Author Name: RajeshKumarRajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இரண்டு நாவல்களும்  எதார்த்த நடையில் எழுதபட்ட குடும்ப த்ரில்லர்கள்.  

19 வயது சொர்க்கம் -

தன் காதலில் ஏற்பட்ட ஒரு பெரும் பிரச்சனைக்காக, துபாயில் இருந்து திரும்பும்  ராஜகணேஷ்,நண்பன் ஜெயந்த்தின் உதவியை நாடுகிறான். ஜெயந்த்தும் அவன் மனைவி சூர்யநிலாவும் இருவரையும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அதனால், இளம் தம்பதிக்கு அடுக்கடுக்கான பிரச்சனைகள் வந்துக்கொண்டே இருக்கின்றன.அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்களால் அதிலிருந்து வெளி வர முடிந்ததா ? காட்சிகள் பதைபதைப்பையும்,  வசனங்கள் நெஞ்சையும்  நெகிழ வைக்கும். முதலில் காதல் கதையாக ஆரம்பித்து பின்பு குடும்ப கதையாக மாறி, பின்பு க்ரைம் திரில்லராக உருவெடுக்கிறது இந்த கதை. முடிவு, இளகிய மனதுடையோர் கண்களில் கண்ணீர் கசியவிடும் என்பதில் சந்தேகமில்லை.

 யமுனாவின் 48 மணிநேரம் 

அழகான இளம்பெண் யமுனா,  தன் தோழி சுவர்ணாவுடன் இரவு காட்சி படம் ஒன்றைப் பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து வெளியே வருகிறாள்.அந்த பேய் மழை பொழியும்  இரவில் தன் தோழியோடு தான் தங்கியிருக்கும் விடுதிக்கு போக, ஆட்டோ ஒன்றில் பயணிக்க முடிவெடுக்கிறாள்.அந்த நேரத்தில் சுவர்ணா எடுக்கும் ஒரு சிறிய ஆனால்  தவறான முடிவால், ஒரு பெரும் இழப்பு காத்துக் கொண்டிருந்ததை  இருவரும் அiறிய வாய்ப்பில்லை. யமுனா,அடுத்த 48 மணி நேரம்  தன் வாழ்க்கையையே புரட்டி போடும் என்று கனவிலும்  நினைத்திருக்கமாட்டாள். எதிர்பாராத மனித ஓநாய்கள், ஆபத்தில்  உதவும் மனிதர்கள்,சூழ்ச்சியும்  வஞ்சகமும் நிறைந்த உலகத்தை முதன் முதலாக  சந்திக்கிறாள். திகில் மற்றும் திடுக்கிடும் பரபரப்பான சம்பவங்கள் நிறைந்த கதை. 

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+7 more
View All