Share this book with your friends

CALIFORNIA KADHALI - HONKONG VIZHIGAL / கலிபோர்னியா காதலி - ஹாங்காங் விழிகள் இரண்டு நாவல்கள்/2 Novels

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கலிபோர்னியா காதலி - 

கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோவில்  ஜாகீரும்  செங்குட்டவனும் ஒரே சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அதுவும்தவிர  அந்த நகரத்திலேயே இருவரும்  ஒரே அபார்ட்மெண்ட்டில்  வசிக்கிறார்கள்.ஒருநாள் காதலர் தினத்தன்று  தன் காதலி லூசியைக்  காணச் செல்கிறான்,ஜாகீர். அப்போது அவனது அலைபேசி ஒலிக்கிறது.மறுமுனையில் காதலியின் குரல். அந்த அழைப்பிற்குபின்  நடப்பவை எல்லாம் அவன் கை மீறி போகிறது. வீபரீதம் ஒன்றில் சிக்குகிறான்.இதுகுறித்து  போலீஸ் தன்  விசாரணையை ஆரம்பிக்கிறது. அவனுடன் சம்பந்தப் பட்டவர்கள் அனைவருமே பிரச்சனைகளில் சிக்குகிறார்கள். அதனூடே, அந்த நகரத்தில் தொடர் கொலைகள் சர்வ சாதாரணமாக  நடக்கின்றன. பிரச்சனையின் மையம் அறியாது திகைக்கின்றனர் சான் பிரான்ஸிஸ்கோ போலீஸ் அதிகாரிகள். 

மறு பக்கம், சான் பிரான்ஸிஸ்கோ நகரை சேர்ந்த மார்ட்டின் சாம்ஸ் குடிபோதையில் கார் ஓட்டியதற்காக போலீஸ் அதிகாரி பால் ஹாரிஸிடம் பிடிபடுகிறான்.அவர்,அவனிடம் விசாரிக்க ஆரம்பித்தவுடன், முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்கிறான்  மார்ட்டின் சாம்ஸ்.அதனால் சந்தேகத்தின்பேரில் அவன் காரை சோதனையிடுகிறார். அவருக்கு அதில் ஒரு விபரீதம் காத்திருப்பதை அறியாமல். பின்னர் நடக்கும் விஷயங்கள் எல்லாம் திகிலைக் கூட்டுகிறன.

இந்த இரண்டு கிளைக் கதைகளும் ஒன்றிணைந்து  சான்  பிரான்ஸிஸ்கோவில் நடக்கும்  குற்ற பின்னணிகளை அதிர்வுடன் விவரிக்கிறது.  

ஹாங்காங் விழிகள் 

இரண்டு கிளை கதை.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் வைதேகி. தன் கல்யாணச் செலவுகளுக்காக வீட்டை அடமானம் வைத்து வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் வீடு பறி போகும் அபாயம்… அந்த கஷ்டத்தில் மீள்வதற்கு ஒரு வாய்ப்பு அவளைத் தேடி வருகிறது!  ஹாங்காங்  சென்று அங்கு ஒருவரிடமிருந்து ஹாங்காங் விழிகளை பெற்று வர விமானத்தில் பறக்கிறாள். ஆபத்தில்லா பயணம் என நினைத்து பயணக்கிறாள் வைதேகி ஆனால்  அழகான  ஹாங்காங்கில் திடுக்கிடும் ஆபத்துக்களை அவள் சந்திக்க நேரிடுகிறது...!   ஹாங்காங் விழிகள் என்றால் என்ன? சொன்னபடி அவற்றுடன் சென்னை வந்தாளா வைதேகி…?

Read More...
Paperback
Paperback 230

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+7 more
View All