Share this book with your friends

MARUTHTHUVAM SATTAM ARANERI / மருத்துவம் சட்டம் அறநெறி

Author Name: Dr. D.ilamurugan Mbbs M.d | Format: Paperback | Genre : Others | Other Details

மருத்துவமும், சட்டமும் சமுதாயத்தின் இரண்டுகண்களைப் போன்றது. இந்த இரண்டு கண்களின் நோக்கம்மக்களின் நல்வாழ்வை உறுதிப் படுத்துவது என்பதாகஇருத்தல் வேண்டும், கண்கள் இரண்டாயினும் காட்சிஒன்றுதானே! இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண இயலாது. அவ்வாறு காண முயன்றால் அவ்வாறு கண்ணுக்குதெரிந்தால் மூளையில் ஏதோ கோளாறு என்று பொருள்,எனவே மருத்துவமும் சட்டமும் ஒன்று இணைந்து இயங்கிமக்களின் நல்வாழ்வினை உறுதி செய்ய வேண்டும்.ஒரே முகத்தில் இரண்டு கண்கள் அருகருகே இருந்தாலும்ஒரு கண் மற்றொரு கண்ணைப் பார்ப்பதில்லை. அது ஒருகண்ணாடியின் மூலமாகவே ஒன்றையொன்று பார்த்துக் கொள்கின்றன. அது போன்றே மருத்துவமும், சட்டமும்சமுதாயம் என்கிற கண்ணாடியின் வழியாகவே ஒன்றையொன்று காணுதற்கு இயலும். சமூதாயத்தில் அவை சிறந்த மக்கள் நல காவலனாக இயங்க வேண்டும். அவ்வாறு இயங்குவதற்கு அவைகளுக்குள் ஒரு ஒருங்கிணைப்பு தேவையானதாகும்..மருத்துவர்கள் சட்ட வல்லுநர்களை ஒரு வித மிரட்சியுடன்  நோக்குதலும், சட்ட வல்லுநர்கள் மருத்துவர்களை ஒரு வித ஐயத்துடன் பார்ப்பதை விட்டுவிடுதலும் பொது மக்களின் நன்மைக்கு உகந்ததாகும்.மருத்துவத் துறையில் உள்ள சில சட்டங்களைக் குறித்து இந்த நூல் ஒரு சிறிய ஆய்வு நூலாக எழுதப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கும் சட்டத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை வலுப்படுத்துவதும் பொது மக்களுக்கு இவற்றைக் குறித்த செய்திகளை தெரிவிப்பதும் இந்த நூலின்முக்கிய நோக்கமாகும்.

Read More...
Paperback
Paperback 151

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மருத்துவர். து. இளமுருகன் எம் பி.பி.ஸ் எம்.டி

தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் வசிக்கும்எழுத்தாளர்/ மருத்துவர் D. ILAMURUGAN  MBBS MD(து இளமுருகன் MBBS MD என்றும் அழைக்கப்படுபவர்) ஒரு வெற்றிகரமான  எழுத்தாளர்.தன்னுடைய உண்மையைத்தேடும் வேட்கையை பல நூல்களைக் கறபதன் வழி தீர்ப்பதோடு தான் கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இவர் கண்ட வழி  எழுத்து ஆகும். மக்களின் பார்வையில் செய்திகளைக் கண்டுஅதைப் பகிர்ந்து கொள்வதிலும் எந்த ஒரு செய்திக்கும்மறுபக்கம் உண்டு என்ற நம்பிக்கையுமே இவர் எழுத தூண்டு கோலாகும். இதுவரை 10க்கும்மேற்பட்ட தமிழ் நூல்களையும் 5 ஆங்கில நூலகளையும்  எழுதியுள்ள இவருக்கு  சான்றுகளுடன் கட்டுரை நூல்களை எழுதுவதில்தான் விருப்பம். வெறும் கற்பனயாய் கதைப்பது பயன் தராது என்பது இவரின் ஆழமான நம்பிக்கை. இவரின்1) ராஜராஜ சோழனின் மறுபக்கம், 2)கரிகாலன் கட்டிய கல்லணை? 3)தொல்காப்பியம் மெய்யும் பொய்யும், 4)சிந்து முதல்காவிரிவரை ஆகிய நூல்கள்  சிறந்தமுறையில் விற்பனை ஆகிக் கொண்டுள்ள

Read More...

Achievements

+9 more
View All