Share this book with your friends

Milirmana Ezhilmadhi / மிளிர்மன எழில்மதி

Author Name: Narsim | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

செழியன், இளைஞன். பிரபலமான கார்ப்பரேட் கம்பெனியின் முக்கியப் புள்ளி. அவனுடன் வேலை பார்க்கும் மதியுடன் முகிழ்க்கும் காதல், கார்ப்பரேட் பின்னணியில் அவர்களுக்குள் நிகழும் ஈகோ, அதைத் தாண்டிய அன்பு என ஒரு கதை நகர்கிறது. செழியனின் ரூம் மேட் அதிபன். கிரிக்கெட் கோச், தமிழக அணியின் ஏ டிவிசன் செலக்ட்டர்களில் ஒருவன். காதல் தோல்வியால் எதிலும் பற்றில்லாமல், நேர்மையாகவும் கண்டிப்பாகவும் கிரிக்கெட், செலக்ஷன், போட்டிகள் என நாட்களைக் கடத்துபவன். அவனுடைய முன்னாள் காதலி, அவளது மகனின் கிரிக்கெட் தேர்வுக் கோரிக்கையுடன் மீண்டும் அவன் வாழ்வில் நுழைகிறாள். அதுவரை நேர்மையும் கண்டிப்புமாய் இருந்த அதிபன், தன் முன்னாள் காதலிக்காக நேர்மையை விட்டுக்கொடுக்கிறானா, என்ன செய்தான் என இன்னொரு கிளைக் கதையாகவும் விரியும் தொடர் இது.

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நர்சிம்

மதுரையைச் சேர்ந்த நர்சிம் இப்போது பணி நிமித்தமாக சென்னையில் வசிக்கிறார். 2007-ல் எழுதத் தொடங்கி, தொடர்ந்து தமிழின் முதன்மையான இதழ்களில் சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன. 1990-களின் மதுரையையும் அதன் மக்களையும் எழுதுவதில அதிக ஆர்வம் கொண்டவர். ‘அய்யனார் கம்மா’ (2010), ‘ஒரு வெயில் நேரம்’ (2012), ‘பைத்தியக் காலம்’ (2017), ‘மதுரைக் கதைகள்’ (2017), ‘ஆட்டம்’ (2020) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், ‘தீக்கடல்’ (2010), ‘தற்கொலைக்கு முயன்று தோற்றவன்’ (2013), ‘காமத்தின் மீது பொழியும் மழை’, ‘வெயில் நேரத்து மழை’ (2020) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘அலப்பறை’ (2017), ‘சார்மினார் எக்ஸ்பிரஸ்’ (2020) ஆகிய நாவல்களும் இதுவரை வெளிவந்துள்ளன.

Read More...

Achievements