Share this book with your friends

Neela Nila / நீல நிலா

Author Name: Rajeshkumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இரண்டு கிளைகள் கொண்ட  கதைகளை எழுதுவதில் வித்தகரான எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திகில் நாவல் 'நீல நிலா'. 

முதல் கிளை

ஒரு தொழிலதிபருக்கு நேரும் பெரும் விபரீதம். அந்த விபரீதம் எதனால் புரியாமல் கலங்கி தவிக்கும் மருத்துவர்கள் ஒருபக்கம். இது தற்கொலை முயற்சியா அல்லது கொலைமுயற்சியா என துப்புதுலக்க அல்லல்படும் காவல்துறை அதிகாரிகள். அதை ஏற்படுத்திய எதிரி யார் என்பது மற்றொரு பக்கம். 

அவரின் பிள்ளைகளா, நண்பர்களா அல்லது தொழில் போட்டியா...? 
கொலையாளி யார் என கண்டுபிடிப்பதில் வெற்றி கிட்டுமா? 

இரண்டாவது கிளை

அடர்ந்த காணாதது கண்டான்  காட்டில் ஒரு அதிசயத்தை கேள்விப்பட்டு அதன் உண்மைதன்மை அறிய தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு ஒன்று பயணிக்கிறது. அந்த குழு காட்டில் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இயற்கை என்ன என்று கேட்டு துவம்சம் செய்கிறது. அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் அந்த குழுவில் யாரேனும் ஒருவருக்காவது மரணபீதியை அளிக்கிறது. அஞ்சாமல் பயணிக்குமா அந்த குழு?

ஒரு கட்டத்தில் இரண்டு கிளைகளும் இணைகிறது....மர்மங்கள் அவிழ்கின்றன. புதிர்களுக்கான பதில்கள் புலப்படுகின்றன. யாரால்...எப்படி?

Read More...
Paperback
Paperback 225

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ராஜகோபால். பின்னர் எழுத்துக்காக ராஜேஷ்குமார் எனும் புனைப்பெயர் கொண்டார். இதுவரை 1500 நாவல்கள் 2000 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைத்தவிர நூற்றுக்கணக்காண அறிவியல்,ஆன்மிக மற்றும் வாழ்வியல்  கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!” , “வாவ் ! ஐந்தறிவு”, “சித்தர்களா! பித்தர்களா!!”  முக்கியமானவை.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தன் தந்தை செய்த கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்,  அதை கவனித்தபடியே கதைகள் எழுதினார்.இவரின்  முதல் சிறுகதை 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. நாவலின் தலைப்பு வாடகைக்கு ஓர் உயிர். அதே 1980வது வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப் என்ற  முதல் தொடர்கதை வெளியானது.

1980லிருந்து 1995 வரை தமிழ்நாட்டில்  41 மாத நாவல்கள் வெளிவந்தன. அனைத்திலும் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதியதின் விளைவு 1998ம் ஆண்டே 1000மாவது நாவலைத் தொட்டுவிட்டார்.

 இவரது  எழுத்து படிக்க எளிமையாகவும், படித்தவுடனேயே புரிந்து கொள்ளும்படியாக இருப்பதால் பாமர வாசகர்களும் படிக்கிறார்கள். அதேபோல் பல்துறை வல்லுனர்களும் படிக்கிறார்கள் வாசிக்கிறார்கள்.

சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்களை  பல பல்கலைக்கழக மாணவர்கள் பி.எச்டி. படிப்பில் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு டாக்டர் பட்டம் பெற்று இருப்பது சிறப்பு.

இவருடைய  நாவல்கள் பல திரைப்படங்களாகவும்  தொலைக்காட்சித்   தொடர்களாகவும்  தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புக்கள் அச்சுப்புத்தகங்களாக மட்டுமின்றி  மின்புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கின்றன. எழுத்துலகில் இவர் ஆற்றிய  சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.

Read More...

Achievements

+7 more
View All