Share this book with your friends

Paniththulikal / பனித்துளிகள்

Author Name: Thilani Sabeshan | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

‘பனித்துளிகள்' எனும் நூல் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான புதிய ஆக்கப் பூர்வமான சிந்தனைகளுடன் உருப்பெற்றது. இந்நூல் வெவ்வேறு பாணிகளைக் கொண்ட கவிதைகள், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள், விவேகப்புதிர்கள், அற்புதமான சிலேடைகள், ஒரே பாடல் மெட்டுக்கு வேறு பாடல் வரி கொண்ட கதை போன்றனவைகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் புலமைவாய்ந்த சான்றோர்களின் அரிய படைப்புகளையிட்டு நூலாசிரியரின் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. நூலாசிரியர் தனது படைப்புக்களை அழகாகச் சித்தரிக்கும் பல சித்திரங்களை உள்ளடக்கி, அரிய கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்கின்றார். ‘பனித்துளிகள்' சுவாரஸ்யமானது, நகைச்சுவையானது, உணர்ச்சி பூர்வமானது, புதிய படைப்பாற்றலோடு புனையப் பெற்றது.

Read More...
Paperback
Sorry, Book is not available for sale.
Paperback 945

Inclusive of all taxes

Sorry, Book is not available for sale.

திலாணி சபேஷன்

இந்நூலாசிரியர் திலாணி சபேஷன் இலங்கையை பூர்விகமாக கொண்டவர். இவர் விரும்பும் பொழுதுபோக்குகள் புத்தகங்கள் வாசிப்பதுவும் ஓவியங்கள் வரைவதும் ஆகும். அத்துடன் இயல், இசை, நாட்டியம், நாடகம் போன்ற கலைகளிலும் ரசனை கொண்டவர். இவர் தனது சொந்த குழந்தைகளுக்கு அவர்களின் ஆர்வங்களின் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான கருவுடன் கூடிய வைபவங்களை ஒழுங்கமைத்து,  பங்குபெற்ற அனைவருக்கும் தனித்துவமான அனுபவத்தை வழங்கி பலராலும் போற்றப்பட்டவர். 

திலாணி சபேஷன் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மீது எப்போதும் பற்றும் ஆர்வமும் உடையவர். தனது ஆர்வத்தை நிறைவேற்றும் வகையில், இவர் தனது  முதல் புத்தகமான 'பனித்துளிகள்' என்னும் பல் சுவை பொருந்திய நூலை எழுதியுள்ளார்.

Read More...

Achievements

+7 more
View All