Share this book with your friends

Panjamapathagam - Arabia Roja / பஞ்சமாபாதகம் - அரேபிய ரோஜா

Author Name: Rajeshkumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பஞ்சமாபாதகம் 


இது இரண்டு கிளைக்கதை கொண்ட நாவல். ஒருபக்கம் மான்யா – இனியன், இரு பத்திரிக்கையாளர்கள் சிலை கடத்தல் பற்றிய கட்டுரைக்காக புவனேஷ்வர் நகருக்கு வருகிறார்கள்.அங்கு மான்யாவின் தோழி பல்லவி வீட்டில் தங்குகிறார்கள். அமைதியாக ஆரம்பிக்கும் இவர்களது வாழ்க்கையில் இதற்கு பிறகு நடப்பவை எல்லாம் விபரீதத்தின் வகையில் சேர்ந்தது.மறுபக்கம் ஒரு பெரியவர் தன்னிடம் இருக்கும் நிலத்தை விற்க ஓம்நமச்சிவாயம் என்னும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம் வருகிறார். அந்த நிகழ்வுக்குபின் என்ன நடக்கப் போகிறது? புவனேஷ்வர் நகரில் நடக்கும் சிலைக் கடத்தல் சம்பவங்கள், அதனூடே இருக்கும் தந்திரம், சினம், ஆசை, பேராசை, அகங்காரம் மற்றும் ஆணவம். அடுத்து என்ன நடக்கும் என தெரியாத ஒரு பரபரப்பான கதைக் களம். 

அரேபிய ரோஜா 


மஹிமா, தைரியமிக்க ஒரு அழகான இளம்பெண், ஒரு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் பணியாற்றுகிறாள். தன் குழுவுடன் சேர்ந்து மருத்துவத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தை துபாயில் உள்ள அல்ஃஅரபத் என்னும் நிறுவனத்திற்காக கண்டுபிடிக்கிறாள். அப்போதிலிருந்து அவளுக்கு பிரச்சனைகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. முதலில் சாதாரணமாக வரும் மிரட்டல்கள் பின்பு அசாதாரணமாகின்றன. எதிரிகள் யார்.. எங்கு இருக்கிறார்கள் என்று ஒன்றும் புரியாத சூழ்நிலையில் பேராபத்து தனக்காக காத்திருக்கிறது என்று தெரிந்தும் துபாய் பயணம் மேற்கொள்கிறாள் மஹிமா. அவள் கால்கள் துபாய் தரையில் பட்டவுடன்தான் தெரிகிறது.. அவள் எத்தனை பெரிய விபரீதத்தில் சிக்கியிருக்கிறாள் என்று. இந்த அரேபிய ரோஜா மணக்குமா அல்லது மரணிக்குமா..?

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ராஜகோபால். பின்னர் எழுத்துக்காக ராஜேஷ்குமார் எனும் புனைப்பெயர் கொண்டார். இதுவரை 1500 நாவல்கள் 2000 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைத்தவிர நூற்றுக்கணக்காண அறிவியல்,ஆன்மிக மற்றும் வாழ்வியல்  கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!” , “வாவ் ! ஐந்தறிவு”, “சித்தர்களா! பித்தர்களா!!”  முக்கியமானவை.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தன் தந்தை செய்த கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்,  அதை கவனித்தபடியே கதைகள் எழுதினார்.இவரின்  முதல் சிறுகதை 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. நாவலின் தலைப்பு வாடகைக்கு ஓர் உயிர். அதே 1980வது வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப் என்ற  முதல் தொடர்கதை வெளியானது.

1980லிருந்து 1995 வரை தமிழ்நாட்டில்  41 மாத நாவல்கள் வெளிவந்தன. அனைத்திலும் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதியதின் விளைவு 1998ம் ஆண்டே 1000மாவது நாவலைத் தொட்டுவிட்டார்.

 இவரது  எழுத்து படிக்க எளிமையாகவும், படித்தவுடனேயே புரிந்து கொள்ளும்படியாக இருப்பதால் பாமர வாசகர்களும் படிக்கிறார்கள். அதேபோல் பல்துறை வல்லுனர்களும் படிக்கிறார்கள் வாசிக்கிறார்கள்.

சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்களை  பல பல்கலைக்கழக மாணவர்கள் பி.எச்டி. படிப்பில் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு டாக்டர் பட்டம் பெற்று இருப்பது சிறப்பு.


இவருடைய  நாவல்கள் பல திரைப்படங்களாகவும்  தொலைக்காட்சித்   தொடர்களாகவும்  தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புக்கள் அச்சுப்புத்தகங்களாக மட்டுமின்றி  மின்புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கின்றன. எழுத்துலகில் இவர் ஆற்றிய  சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.

Read More...

Achievements

+7 more
View All