Share this book with your friends

SARPPA VIYUGAM - YETHO NADAKKIRATHU… ! / சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது… ! இரண்டு நாவல்கள்/2 Novels

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சர்ப்ப வியூகம் 

அமானுஷ்யத்தை மையமாக கொண்ட இரண்டு கிளை கதை.

முதல் கதை...

ஹரியும் ஜெயாவும் இளம் தம்பதிகள், ஊட்டி செல்லும்போது அவர்களுடன் பயணிக்கிறான்,ஜெயாவின் எட்டு வயது தம்பி வருண். அங்கு சென்றவுடன், அவன் நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைகின்றன.முதலில், அவற்றை கவனிக்காமல் விடும் ஹரிக்கு அதுவே பெரிய பிரச்சனையாக மாறி பின் விபரீதமாக உருவெடுக்கிறது.

இரண்டாவது கதை...

ஊட்டியில் உள்ள பெரிய செல்வந்தரின் மகள் துர்காவும், சென்னையில் உள்ள தொழிலதிபரின் மகன் வல்லப்பும்  காதலிக்கிறார்கள்.ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.ஆனால், திருமணம் செய்தால் விபரீதம் நிகழும் என எச்சரிக்கிறார் குடும்ப ஜோதிடர்.

ஏதோ நடக்கிறது..!

உளவியல் பேராசிரியர் அமிர்தவர்ஷிணி ஜூபிடர் டிவி சேனலில் நடக்கும் விவாத நிகழ்ச்சிக்கு பங்கேற்க செல்கிறாள்.கடைசி நேரத்தில், அந்த அரங்கத்தில் பங்கேற்பவர்கள் சிலர்  மனநோயாளிகளாக இருந்து சமீபத்தில் குணமானவர்கள் என அறிந்து முதலில் அதிர்கிறாள்.பின்பு அவளின் அபரிமிதமான துணிச்சல் காரணமாக அதை ஒத்துக்கொள்கிறாள்.ஆனால், அந்த நிகழ்ச்சியின் தொடக்கமே யாரும் எதிர்பாராத விபரீதத்துடன் ஆரம்பிக்கிறது.அரங்கமே அதிர்கிறது.ஸ்தம்பிக்கிறது.

இந்த இரண்டு கதைகளிலும் உளவியலையும் அமானுயுஷ்த்தையும் அறிவியலோடு சரிவிகிதத்தில் கலந்து தந்திருக்கிறார்...உங்கள் அபிமான எழுத்தாளர்.

 

Read More...
Paperback
Paperback 230

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+7 more
View All