Share this book with your friends

The Untold Tamil History / என்று தீரும் இந்த சுதந்திர தாகம் (தமிழனின் 2500 வருட சுதந்திர போராட்ட வரலாறு)

Author Name: Mathan Kumar | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

ஆரியர்கள் ஏன் வந்தார்கள்? அந்த கைபர் மற்றும் போலன் கணவாய்கள் எங்கே இருக்கின்றன?என்ற கேள்விகளுக்கும் விடையினை கண்டறிய மனம் துடித்தது.ஆனால் அனைத்து கேள்விகளுக்கும் பதினோராம் வயதிற்கு பின்பே தெளிவு கிடைக்க ஆரம்பித்தது. ஆறாம் வகுப்பினை படிக்க ஆரம்பித்த பொழுது தான் மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றிய சரித்திரம் அடங்கிய சரித்திரப் புத்தகம் ஓன்று கையில் கிடைத்தது. பலுசிச்தானம், ஆப்கானிச்தானம் மற்றும் பாகிச்தான் ஆகிய இடங்களில் கைபர் மற்றும் போலன் கணவாய்கள் இருப்பது தெரிய வந்தது. ஆக, இந்தியா அங்கு வரை விரிந்து இருந்திருக்குமோ என்று யோசனை உதிக்க ஆரம்பித்தது. வருடங்கள் செல்லச் செல்ல, பதினைந்து வயதில், சாலமோன் இராசனுக்கு, அவனுடைய தெய்வத்திற்கு கோவிலெழுப்ப மயிலிறகு இங்கிருந்து சென்றது என அறிய நேர்ந்த வாக்கியங்களும் அதிகமாக யோசிக்க வைத்தது. எனவே அதிகமாக படிக்க படிக்க, அதிசயங்கள் விரிந்து கொண்டே சென்றது. அனைத்து கேள்விகளுக்கும் விடை, விடுதியில் படிக்கின்ற நேரத்தில் வரலாற்றை மட்டுமே படித்ததினாலும், நேருவின் உலக சரித்திர புத்தகத்திலிருந்தும் விடை கிடைத்தது. சாம வேதத்தை அடிப்படையாகக் கொண்ட சாம ஆரியர்களே (சமாரியர்கள்) கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள் என்றும், அவர்களே தற்போதைய இந்தியர்கள் என்றும், நாம் இந்தியரல்ல, தமிழரென்றும், சூழ்ச்சியினாலேயே, சுதந்தர பூமியிலிருப்பதாய் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் எனவும் புரிந்தது. அதற்காகவே இன்று வரை போராடிக்கொண்டிருக்கிறோம் யாம்.

மதன் குமார்

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மதன் குமார்

புத்தகத்தின் ஆசிரியர் மதன் குமார் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பக்தியை சேர்ந்தவர். சிறு வயது முதலே சரித்திர ஆர்வம் உடையவராய் தமிழனின் 2500 வருட சுதந்திர போராட்ட வரலாற்றின் முதற்பாகத்தை தன்னுடைய 19 ஆவது வயதில் எழுதியுள்ளார். இதன் பாகங்கள் தொடர்ச்சியாக மேலும் வெளியிடப்படும்

Read More...

Achievements

+11 more
View All