Share this book with your friends

Vishnu Sahasranamam / விஷ்ணு சஹஸ்ரநாமம்

Author Name: S. Arul Selva Perarasan | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

"விஷ்ணு சஹஸ்ரநாமம்" என்பது, மஹாபாரதத்தின் அநுசாஸன பர்வம், 149ம் அத்தியாயத்தில் பீஷ்மர் மூலம் யுதிஷ்டிரனுக்கு வெளிப்படுத்தப்படும் முக்கிய துதியாகும். இந்த விஷ்ணு சஹஸ்ர நாமத்தை இயற்றியவர் வியாசர் என்று பீஷ்மரே இந்த அத்தியாயத்தின் 141ம் சுலோகத்தில் சொல்கிறார். 

பத்ம புராணம், ஸ்கந்த புராணம், கருட புராணம் ஆகியவற்றிலும் இதன் வெவ்வேறு பதிப்புகள் உள்ளன என்றும், சுந்தர குட்கம் என்ற படைப்பில், இதன் சீக்கிய பதிப்பும் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. சம்ஸ்கிருதத்தில் "ஸஹஸ்ரம்" என்றால், "ஆயிரம்" என்றும், "நாமம்" என்றால், "பெயர்" என்றும் பொருள். எனவே, இந்த நாமாவளியை "விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்" என்றும் பொருள் கொள்ளலாம்.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வரும் ஆயிரம் பெயர்களும், கர்மத்தைக் கட்டுப்படுத்தும் தெய்வத்தின் சக்தியையே குறிப்பாகத் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து வரும் பெயர்களும் கூட, ஒரு வாக்கியமாக அமைந்து, பெரும் பொருளை உணர்த்தவல்லவையாக இருக்கின்றன என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

Read More...
Paperback
Paperback 205

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

செ. அருட்செல்வப்பேரரசன்

புராண மொழிபெயர்ப்பாளரும், கணினி வரைகலைஞருமான செ. அருட்செல்வப்பேரரசன் (ஏப்ரல் 6, 1978), மகாபாரதத்தை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்தவர். அதைத் தொடர்ந்து ஹரிவம்சத்தையும், தற்போது வால்மீகி ராமாயணத்தையும் மொழிபெயர்த்து வருகிறார். 

தமிழில் முழுமகாபாரதம் சம்ஸ்கிருதத்தில் இருந்து 1948-ல் தி.ஈ.ஸ்ரீனிவாசாச்சாரியாரால் மொழியாக்கம் செய்யப்பட்டு ம.வீ.இராமானுஜாச்சாரியாரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது கும்பகோணம் பதிப்பு எனப்படுகிறது. அருட்செல்வப்பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் அதன்பின் வெளிவந்த முழுமையான வடிவம். ஆங்கிலத்தில் இருந்து சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்யப்பட்டது. இணையத்தில் இருப்பதனால் ஆய்வாளர்களுக்கு உதவியானது.

விருதுகள்
கோவை கொடீஷியா இலக்கிய விருது 2023
சிறுவாணி இலக்கிய விருது 2023
விஜயபாரதம் பிரசுரம் பாரதி விருது 2024

நூற்பட்டியல்
முழுமஹாபாரதம் (கிண்டிலில் - 14 தொகுதிகள்)
ஹரிவம்சம் (அச்சில் - 3 தொகுதிகள்)

நளதமயந்தி (அச்சிலும், கிண்டிலிலும்)
நாகவேள்வி (அச்சிலும், கிண்டிலிலும்)
கருடனும் அமுதமும் (அச்சிலும், கிண்டிலிலும்)
துஷ்யந்தன் சகுந்தலை (அச்சிலும், கிண்டிலிலும்)
யயாதி (அச்சிலும், கிண்டிலிலும்)
சாந்தனு சத்தியவதி (அச்சிலும், கிண்டிலிலும்)
அம்பை – சிகண்டி (அச்சிலும், கிண்டிலிலும்)
விஷ்ணு சஹஸ்ரநாமம் (அச்சிலும், கிண்டிலிலும்)

Read More...

Achievements