You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇந்த நூலின் மூலம் கன்னடம்.இதன் ஆசிரியர் சம்பா ஜெய்பிரிகாஷ், இந்த நூலிற்காக கர்நாடக மாநிலத்தின் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார்.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பற்றி மையமிட்டே இந்த நூல் அமைந்துள்ளது. அக்குழந்தைகளின் மனநிலை, உடல்மொழி, முதலியவைகளைப் பற்றி மிக நுட்பமாக பேசிகிறது.
இத்தகைய சிறப்பு குழந்தைகளுக்கு முறையாக அளிக்கப்படும் கவனிப்புகள் மற்றும் பராமரிப்புகளின் மூலம் அவர்களை சிறப்பான குழந்தைகளாக மாற்றமுடியும் என்பதை பரிசோதனை முயற்சியின் மூலம் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார். மனதை உலக்கும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புனைவுதான் இந்தப் புத்தகம்
உலகெங்கிலும் உள்ள சிறப்புக் குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோர்களும், சிறப்புக் குழந்தைகளைப் பராமரிக்கிற பள்ளிகளும் இந்நூலை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
சம்பா ஜெய்பிரகாஷ்
இவர் ஒரு உளவியல் நிபுணர்.கடந்த 30 ஆண்டுகளாக மாற்றுத் திறன் குழந்தைகளுக்காக சேவையாற்றிவருகிறார..
பிறந்து வளர்ந்தது மைசூரில்.மைசூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
மாற்றுத் திறன் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான கற்பித்தலை பல மாநிலங்களில் பல நிறுவனங்களில் மேற்கொண்டவர்
2016 ஆம் ஆண்டில் சிறப்புக் குழந்தைகளுக்கான " சாத்யா" என்ற பெயரிலான பள்ளியைத் தொடங்கி சமூக அக்கறையோடு நடத்திவருகிறார்.தான் பெற்ற பரந்துபட்ட அனுபவத்தை இந்தப் பள்ளிக்கு வழங்கி அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்.
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் பரமரிக்கப்பட வேண்டும் என்பதே இவரது மைய நோக்கமாகும்
The items in your Cart will be deleted, click ok to proceed.