Share this book with your friends

Desabakthiyum, Manithaneyamum / தேசபக்தியும், மனிதநேயமும் சகோதரத்துவம் – முதல் தொடர்

Author Name: Anbudan Miththiran | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தேசபக்தியும், மனிதநேயமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. மனிதநேயம் நாடு, சாதி, மதம், இனம் போன்ற வேறுபாடுகளை கடந்தது. காதல் இல்லாமல் மனித சமுதாயம் இருந்திக்க இயலாது. இது ஒரு தொடர் கதை. உண்மையான காதல் பிரிவதில்லை என்ற நாவலில் நடுவில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ள இந்த தொடர்கதை, அந்த நாவல் போலவே காதல், சமூக பொறுப்பு, தேசபக்தி, மனிதநேயம் என்று பல பரிணாமங்களில் பயணிக்கிறது. 

இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு சகோதர நாடுகளுக்கு இடையே காஷ்மீர் எல்லைப் பிரச்சனை என்றும் ஓயாது ஊடகங்களில் ஓதிக்கொண்டிருப்பது கடந்த காலம் முதல் இன்று வரை நடந்து கொண்டிருக்கும் அதே நேரம் நாம் ஏன் எல்லைகளைக் கடந்து அன்பின் சன்னிதானத்தில் சகோதரர்களாக வாழக் கூடாது? என்று என் மனதில் உதித்த கேள்வி தான் இந்த தொடர் கதை உருவாக காரணமாக அமைந்தது. இந்தியா, பாக்கிஸ்தான் இடையே பிரச்சனை மறைந்து எப்போதும் ஒற்றுமையாக சகோதர நாடுகளாக இருப்பது சாத்தியம் தானா? கதைகளுக்கு, கற்பனைகளுக்கு அது மிக எளிதில் சாத்தியமாகும் விடயம் தான். நனவில் சாத்தியமாக வேண்டுமெனில் அன்பு வார்த்தை அளவில் இல்லாமல், செயல் வடிவம் பெற வேண்டியது அவசியம். 

துப்பாக்கியால் எப்படி சுட்டுக் கொல்வது, ஏவுகணையால் இலக்கை எப்படி தாக்கி அழிப்பது, என்று அழிவு பாதையில் சிந்திக்கும் இந்த உலகில் என்று அன்பின் ஆட்சி நடக்க தொடங்குறதோ, அன்று முதல் இந்த உலகம் பாதுகாப்பான இடமாக மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை. அதற்காகவே இந்த தொடர்கதை அர்ப்பணிக்கப் படுவதோடு மட்டுமல்லாமல், இந்த தொடர்கதை தொடர் புத்தகங்களாக வெளிவர உள்ளன. 

Read More...
Paperback
Paperback 170

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரனின் இயற்பெயர் சிவனணைந்த பெருமாள் தி. அவரது தந்தையின் பெயர் திராவியம் வே. அவரது தாயின் பெயர் கற்பகம் தி. அன்புடன் மித்திரன் மார்ச் 3, 1996 இல் பிறந்தார். அவர் கிருஷ்ணர் மற்றும் சிவபெருமானின் பக்தர். அவர் ஒரு சிந்தனையாளர், ஞானத்தை நேசிப்பவர், சமூக சீர்திருத்தவாதி.

அன்புடன் மித்திரன் பொருளாதார ரீதியாக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரது சொந்த கிராமம் தமிழ்நாட்டில் புளியங்குடி அருகே உள்ளது. அவர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தூய்மையான அன்பைத் தேடியுள்ளார். அது அவரை ஒரு எழுத்தாளராக்கியது.

அவர் தமிழ் மொழியில் இரண்டு புத்தகங்களையும், ஆங்கில மொழியில் இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். அவர் தமிழ் மொழியை நேசிப்பவர்.

Read More...

Achievements

+2 more
View All