You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal"என்னவளின் ஏழு" என்னைப் போன்ற அவள் மற்றும் அவள்'களின் உள்ளே வசிக்கும் ஏழு நபர்களை பற்றிய தொகை புத்தகம் ஆகும். தாய், சேய், துணைவி, தோழி என நாம் பார்க்கும் பழகும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இந்த ஏழு பிறவிகளும் உண்டு. குறும்பு செய்யும் கிழவியும் உண்டு, பாடம் சொல்லும் சிறுமியும் உண்டு. பெண்ணவளின் அத்தனையும் அழகு தான். அத்தகைய பெண்களின் உணர்வு கூடம் தான் இப்புத்தகம். "ஆறு முதல் அறுபது வரை அல்ல, பெண்ணின் ஆதி முதல் அந்தம் சொல்லும்", பெண்மணியின் நூலகமாய் இந்தப் புத்தகம் திகழும் என நம்புகிறேன். வாசகர்கள் யாவருக்கும் இதன் சொற்கள் சிரிப்பாகும், வரிகளால் விழி கசியும், திருப்பப்படும் பக்கங்கள் எல்லாம் வாழ்க்கைக்கும் புதுதிருப்பம் தரும் என நம்புகிறேன்! இறுதியாய் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உறுதிமொழிகளும் உங்கள் வாழ்வையும் உறுதிபடுத்தும் என நிச்சயமாய் நம்புகிறேன்.
"பெண்ணே உன் பருவம் ஏழு,
ஒவ்வொன்றிலும் சிகரமாய் எழு!"
- 'ழகரம்' சிநேகா.
'ழகரம்' சிநேகா, S. Sathya Devi, Valarmathi, K. Gokilavani, Kavitha Anbalagan, Sangeetha. N, Renuka devi. R, Pricilla Antony
என்னவளின் ஏழு' என்ற புத்தக தொகுப்பின் ஆசிரியை இவள். இவளது பெற்றோரிட்ட பெயர் சிநேகா. 'ழகரம்' என்ற தலைப்பின் கீழ் இவாள் பேனாவின் மை வழிந்தோடுவதால் இவள் 'ழகரம்' சிநேகா என்று அழைக்கப்படுகிறாள். 30க்கும் அதிகமான புத்தகங்களில் துணை ஆசிரியையாகவும். ஃபூரூட்புள் லைஃப், பெட்டி அன்ட் ப்ரெட்டி ஆகிய புத்தகங்களின் தொகுப்பாளராகவும் கவி பணி புரிந்துள்ளார். "குடிகாக்கும் குடிமக்கள், புல்லட் காரன்" ஆகிய தலைப்புகளில் இவள் இயற்றிய கவிதைகள் சிறப்புடையது. இவளது வரிகளை sinega_khetzia மற்றும் zha.kharam ஆகிய படவரி பக்களில் காணலாம்.
The items in your Cart will be deleted, click ok to proceed.