Share this book with your friends

IPPADIKKU DHANDACHORU / இப்படிக்கு தண்டச்சோறு

Author Name: Chago | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

நாம் பேசுவதை ஆசிரியர்கள் கேட்டு விடக்கூடாது என்று மாணவர்கள் நினைத்த சில கருத்துக்கள்,

மாணவர்கள் சொல்ல வில்லை என்றாலும் இதெல்லாம் எங்களுக்கே தெரியும் ஆனாலும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆசிரியர்கள் நினைக்கும் கருத்துக்கள்,

உங்க பஞ்சாயத்துக்கு நடுவுல நாங்க எங்க வந்தோம்? என்று எண்ணும் பெற்றோர்களுக்கான கருத்துகள்,

ஆகியவை அடங்கிய ஒரு புத்தகம்.

ஏற்கனவே யாரும் கேட்க விரும்பாத அல்லது உதாசினப்படுத்தப்பட்ட அல்லது உப்பு சப்பு அற்ற கருத்துகள் என்று அறியப்படும் விமர்சனங்கள் கொண்ட ஒரு சிறு தொகுப்பு.

இந்த கருத்துகளுக்கு குறைந்தபட்ச மரியாதை கொடுக்கும் நபரை பார்ப்பதே "எட்டா அதிசயம்" அதையும் மீறி ஒருவர் இந்த புத்தகத்தை வாங்கி அதில் உள்ள கருத்துகளை கருத்தில் கொள்வார் என்றால் அந்த நபர் "எட்டாம் அதிசயம்".

எட்டாம் அதிசயம் நிகழ காத்திருக்கிறேன்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சகோ

நான் சக, உங்களைப் போலாவே பள்ளிக்கு நான் முதல்முறை செல்லும் போது அழுது கொண்டே சென்றேனாம். படிக்க சொன்னார்கள் படித்தேன், பாஸ் ஆக சொன்னார்கள் உங்களைப் போலவே பாஸ் ஆனேன்.

கல்லூரி செல்ல வேண்டிய காலம். நமக்கு பிடித்த பாடத்தில் சேர்ந்து கனவை நோக்கி போகலாம் என்ற எண்ணம். அச்சச்சோ நீங்கள் சொல்லும் பாடத்திற்கு பொருளாதார வாய்ப்புகள் கம்மி என்றார்கள். இருந்துட்டு போகட்டுமே என்றேன்.

குடும்ப பொருளாதார நிலையை விளக்கி புரியும் படி சொன்னார்கள். நியாயமாகதான் இருந்தது. சரி இதுவரை நமக்கு தேவையானவை மற்றும் பிடித்ததை மட்டுமா படித்தோம். தேவையில்லாத ஆணிகளும் இருந்தனவே. எனவே நீங்கள் கூறும் பொருளாதார வாய்ப்புகள் தரும் படிப்பையே படிப்போம் என்று ஒப்புகொண்டாகிவிட்டது.

குடும்ப பொருளாதார நிலை உயரும் என்ற நம்பிக்கையிலும், எதிர்காலத்தில் நம் பிள்ளை பெரிய ஆளாக வர வேண்டும் என்ற ஆசையிலும் தன் பொருளாதார சக்திக்கு மீறி செலவு செய்து படிக்க அனுப்பினார்கள். கெத்தாக நானும் சென்றேன்.

கல்வியாளர்கள் வரவேற்பில் நின்று "நாங்க இருக்கோம்" என்று சொல்லாத குறை மட்டும் தான். வரவேற்றார்கள்."இந்த மூனு, நாளு வருசம் கஷ்டப்பட்டீங்கனா வாழ்க்கை நல்லா இருக்கும்" என்ற வசனம் வேறு!.

அப்போதான் ஒரு கேள்வி தோனுச்சு. படுச்சா தான வாழ்க்கை நல்லா இருக்கும், கஷ்டப்பட்டா எப்படி நல்லா இருக்கும்னு.

பரிட்சையில் ஃபெயில்!

அப்போ இருந்து நிறையா கேள்வி தோனுச்சு. பதில் தான் இல்ல. 

இதுதான் என் கதை சுருக்கம்.

Read More...

Achievements